பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

63

 சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
    சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத்
 திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ்
    செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்."
- சிவஞானசித்தியார், 8. 2 - 1.
     சீலம், நோன்பு, செறிவு, அறிவாகிய நன்னெறி நான்மைப் படிகளில் முன்மூன்றும் பயிலாதார்க்கு இறுதியாகிய அறிவுநிலை கைகூடாது. அறிவு நிலையாகிய மெய்யுணர்வு கைகூடாத விடத்துச் சிவனார் திருவடியில் இரண்டறக் கலத்தல் முடியாது. அம் மெய்யுணர்வு ஆசான் திருவருளால் அன்றி வேறொன்றானும் வருதற்கின்று.

(2)
ஒளவிய மிருக்கநா னென்கின்ற ஆணவம்
    அடைந்திட் டிருக்கலோபம்
  அருளின்மை கூடக் கலந்துள் ளிருக்கமேல்
    ஆசா பிசாபமுதலாம்
வெவ்விய குணம்பல இருக்கஎன் னறிவூடு
    மெய்யன்நீ வீற்றிருக்க
  விதியில்லை என்னிலோ பூரண னெனும்பெயர்
    விரிக்கிலுரை வேறுமுளதோ
கவ்வுமல மாகின்ற நாகபா சத்தினால்
    கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை
  கடிதகல வலியவரு ஞானசஞ் சீவியே
    கதியான பூமிநடுவுட்
செவ்விதின் வளர்ந்தோங்கு திவ்யகுண மேருவே
    சித்தாந்த முத்திமுதலே
  சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
    சின்மயா னந்தகுருவே.
     (பொ - ள்.) "ஒளவிய . . . இருக்க" - (எளியேன் பால் சிறிதும் பொருந்தாத) அழுக்காறாகிய பொறாமை குடிகொண்டு முடிவின்றிருக்கவும், நானென்று சொல்லப்படும் உயிர்முனைப்பாகிய ஆணவம் மேலோங்கி நிற்கவும், இவறன்மையாகிய பிசுனத்தன்மை நீங்காதிருக்கவும் இரக்கமென்பது எள்ளளவும் இல்லாதிருக்கவும், இக்கலப்புடனே ஆசையென்னும் பேய்பிடித்து வெறியாட்டாடவும், இங்ஙனம் சொல்லப்பட்டவை முதலான பொல்லாக்குணம் பலவும் அடியேன் பால் கல்விப் பற்றிக் குறைவற நிறைந்து மேலோங்கி நீங்காது நிற்கவும்.