பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


69


"நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
 முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
 சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுட்
 கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே."
முறை - ஆகமம். - 1. 61 - 1.
    "உண்டுடுத்து இன்பங்கொண்டு வாழ்வார், துன்பம் மண்டக் கண்டு துயருறுவர். அதனால் அவர்கள்" காக்கைக்கே இரையாகிக் கழிவர் (பக்கம் 59.)

     பிறப்புத்துன்பமும் இறப்புத் துன்பமும் பேசவொண்ணாப் பெருந் துன்பம்; நினைக்கவொண்ணா நெஞ்சுடைக்கும் நெடுந்துன்பம், இவ்வுண்மை வருமாறுணர்க :

"என்றென் றெண்ணி யிருக்குமுயி ரிடர்ப்பட்டழியு மெழில்வரைக்கீழ்
 ஒன்றும் ஒருவன் தனைப்போலக் கருப்பா சயப்பை யுறுத்துதலான்
 மன்ற வுததி மறிந்தாழ்வான் வருத்த மென்ன வருந்தியிடும்
 நின்ற கருப்பா சயவுதக வெள்ளங் கொள்ள நிறையழிந்தே."
- சிவதருமோத்திரம், சனனமரணவியல், 21
"அங்கி யதனிற் றங்கியிடு மயோ மயத்த கும்பத்திற்
 றங்கு மொருவன் தபனம்போற் றபனம் எய்து தாயுதரத்
 தங்கி சுடவே யழலனைய சூசி யதனா லாகத்தைப்
 பங்கித் திடவே படுமிடரி லிருநாற் குணிதம் பட்டழுங்கும்."
"22
"கருப்பா சயமே கட்டமதாம் அதனி னதிகங் கடுங்காலு்
  முரிக்க மிகவு மோகமுற முன்னை யுணர்வு மந்நிலையே
  மரிக்க ஆலைக் கரும்பெனவே யோனி வழியின் வலிதொலைய்
  நெருக்கப் பட்டு நிலமிசையே தோன்று முயிரு நிலையுடனே."
" 23.
"தனத்தினை மனைதனைத் தானி யந்தனை
 நினைத்தினை யெவரனு பவிப்பவர் நீங்குநா
 ளெனக்கிவை யன்னிய மாகு மேயெனா
 மனத்துயர் மலியவே மாயு மாவியே."
" 26
"வந்திடும் மரண துன்ப மறித்துரை செய்யப் போமோ
 உந்திமே லையும் பித்து முணர்வொடு பொறிக லங்கி
 நந்திடா விருளே மூடி நாவுலர்ந் தலமந் தென்னே
 ந்தமா விறப்பிற் றுன்பம் பவத்துன்பத் தெண்மடங்கே."
- மெய்ஞ்ஞானவிளக்கம்.
"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
 மேற்சென்று செய்யப் படும்"
- திருக்குறள், 335.