பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


78


"உற்றவர் . . . . . . . . .
 இருள்வெளி யாகும் மருளினை யறுத்து
 வந்து புகுதலுஞ் சென்று நீங்கலும்
 இன்றி யொன்றாய் நிகறவந் நிலையில்
 ஒன்றா காமல் இரண்டா காமல்
10
 ஒன்றும் இரண்டும் இன்றா காமல்"
- இருபா இருபது, 20.
(8)
தாராத அருளெலாந் தந்தருள மௌனியாய்த
    தாயனைய கருணைகாட்டித்
  தாளிணையென் முடிசூட்டி அறிவிற் சமாதியே
    சாசுவத சம்ப்ரதாயம்
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்திநிலை
    ஒன்றோ டிரண்டெனாமல்
  ஒளியெனவும் வெளியெனவும் உருவெவும் நாதமாம்
    ஒலியெனவும் உணர்வறாமல்
பாராது பார்ப்பதே ஏதுசா தனமற்ற
    பரமஅநு பூதிவாய்க்கும்
  பண்பென் றுணர்த்தியது பாராம லந்நிலை
    பதிந்தநின் பழவடியாதஞ்
சீரா யிருக்கநின தருள்வேண்டும் ஐயனே
    சித்தாந்த முக்திமுதலே
  சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
    சின்மயா னந்தகுருவே.
     (பொ - ள்) "தாராத . . . இரண்டெனாமல்" - (பிறரெவராலும் தரவொண்ணாத) பொருள் முழுவதும் தந்தருளத் திருவுளங்கொண்டு உரையாட ஒருவராய் (பால் நினைந்தூட்டும்) நற்றாயை ஒத்த பெருந்தண்ணளி காட்டி, (நின் பொன்னார் திருவடியினை அடியேன் முடி மீது சூட்டியருளி, உணர்வின்கண் (திருவருளால்) திருவடியுணர்வாய்த் தணவாது ஒருங்கி நிற்பதாகிய என்றும் பொன்றாத சமாதியே தொல் வழக்கென்றும், (ஒன்றையும்) பகுத்து உணராமலும் (அருமறை எனப்படும்) மந்திரங்களைக் கணிக்காமலும், திருவடிப்பேற்று நிலையினை ஒன்று இரண்டு என்று உரையாமலும்;

     "ஒளியெனவும் . . . . . வாய்க்கும்" - இயற்கைப் பேரொளி யென்றும், திருவருட் பெருவெளி யென்றும், உருவம் என்றும், நாதமென்று சொல்லப்படும் ஒலியென்றும், அறிவு கொள்ளாமலும் (கருவிகளைக் கொண்டு) காணாமல் (திருவருளைக் கண்ணாகக்கொண்டு) காண்பதே,