கவ

10

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

  கவிராச பண்டாரத்தையா அவர்கள் இலஞ்சி வேலவன் மீது திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளனர், அப்பிள்ளைத் தமிழ்க் காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், உமையம்மை, உச்சிப் பிள்ளையார், திருமகள். நாமகள், பிரமன், காளி, வள்ளி, தெய்வயாளை, கன்னிமார், சத்தமாதர், வீரபத்திரர், வையிரவர் தேவதைகள், அட்டவசுக்கள், ஏகாதசருத்திரர் அசுவனி தேவதைகள், சந்திரன் ஆதித்தர் பதினெண்கணம், சத்த ரிஷிகள் ஆகியோர்க்கு வணக்கம் கூறிப் பத்துப் பாக்களைப் பாடியுள்ளனர். 

   திரு சொக்கலிங்க ஐயா அவர்கள் பாடியுள்ள திருநாவுக்கரசர் பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் சிவபெருமான், உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், திலகவதியார், சம்பந்தர், வாகீசர், சுந்தரர், மணிவாசகர், சண்டேசர் அப்பரைக் காக்க எனக் காப்புப் பருவத்தைப் பத்துப் பாடல்களில் பாடியுள்ளனர். (ஈண்டு வாகீசர் என்பவர் திருநாவுக்கரசர் முன் பிறவியில் வாகீச முனிவராக இருந்த திருவுருவத்தினர் ஆவார்.)

    திரு சொக்கலிங்க ஐயா அவர்கள் தாம் பாடிய சுந்தர மூர்த்தி பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில், சேக்கிழார் பிள்ளைத் தமிழ்க்குக் காப்புப் கடவுளராகச் சுந்தரர் குறிப்பிட்டுள்ள நாயன்மார் அமைந்திருப்பது போலச் சைவ நாயன் மார்களையே காப்புக் கடவுளராக அமைத்துக் காப்புப் பருவத்தை முடித்துள்ளனர்.

    சாமி கவிகாளருத்திரர் பாடிய அழகர் பிள்ளைத் தமிழில் பழிச்சினர் பரவல் என்னும் தலைப்பின் கீழ் ஆழ்வார்களையும் எம் பெருமானார் வேதாந்ததேசிகர், மணவாளமா முனிவர் ஞானாசிரியர், அடியார்கள் மீது பாடல்களைப் பாடிப் பின் காப்புப் பருவத்தில் பதினோரு பாடல்களையும் பாடியுள்ளனர்.

    இன்னோரன்ன முறைகளைக் காணும்போது காப்புப் பருவ அமைப்பு, அவ்வவ் ஆசிரியர்களின் மனப்போக்கிற்கு அமையப் பாடப்படும் என்பது புலனாதல் காண்க.