பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

15

   நிலம்துளங்க மேருத் துளங்க நெடுவான்

   தலம்துளங்கச் சப்பாணி கொட்டும்  - கலந்துளம்கொள்

   காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து 

   மாமாரி ஈன்ற மணி

   இக்கயம்கொள் மூவலயம் சூழ்ஏழ் தடவரைகள்

   திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு

   வானாடன் பெற்ற வரை

என்ற இரு செய்யுட்கள் வழி சப்பாணிப் பருவம், செங்கீரைப் பருவக் குறிப்புக்கள் பொருந்தியிருப்பதை உணரவும்.

    அதிரா அடிகளின் காலத்தவரான பெரியாழ்வார் பாடியுள்ள திருமொழியிலும் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுக்குரிய குறிப்புக்கள் உண்டு. அவை பின்வரும் பாடல்களால் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

    “ மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி

     ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்

     பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

     மாணிக் குறளனே தாலேலோ”

        வையம் அளந்தானே தாலேலோ

        என்சிறுக் குட்டன் எனக்கோர்

           இன்னமு தெம்பிரான்

        தன்சிறுக் கைகளால் காட்டிக்

            காட்டி அழைக்கின்றான்

        அஞ்சன வண்ணனோ டாடல்

            ஆட உறுதியேல்

         மஞ்சில் மறையாதே மாமதீ

            மகிழ்ந் தோடிவா “

    செங்கம லக்கழலில் சிற்றிதழ் போல்விரலில்

       சேர்திகழ் ஆழிகளும் கிண்கிணி யும்அரையில்

    தங்கிய பொன்வடமும் தரளநன் மாதுளையின்

       பூவொடு பொன்மணையும் மோதிர மும்கிறியும்