எண
|
|
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
17 |
எண்ணெய்க் குடத்தை
உருட்டி
இளம்பிள்ளை
கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக்
கழகண்டு செய்யும்
பிரானே
உண்ணக் கனிகள் தருவன்
ஒலிகடல் ஓதநீர்
போலே
வண்ணம் அழகிய நம்பீ
மஞ்சனம் ஆடநீ
வாராய்
கருஉடை மேகங்கள் கண்டால்
உன்னைக்கண் டால்ஒக்கும்
கண்கள்
உருஉடை யாய்உல கேழும்
உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடை யாள்மண வாளா
திருவரங் கத்தே கிடந்தாய்
மருவி மணம்கமழ் கின்ற
மல்லிகைப் பூச்சூட்ட
வாராய்
பல்லாயி ரவர்இவ் ஊரில்
பிள்ளைகள் தீமைகள்
செய்வார்
எல்லாமுன் மேல்அன்றிப்
போகா
தெம்பிரான் நீஇங்கே
வாராய்
நல்லார்கள் வெள்ளறை
நின்றாய்
ஞானச் சுடரேஉன் மேனி
சொல்லார வாழ்த்திநின்
றேத்திச்
சொப்படக் காப்பிட
வாராய்
வருக வருக வருக இங்கே
வாமன நம்பீ வருக
இங்கே
கரிய குழல்செய் யவாய்மு
கத்துக்
காகுத்த நம்பீ வருக
இங்கே
அரியன் இவன்எனக்
கின்று நங்காய்
அஞ்சன வண்ணா அசல
கத்தார்
பரிபவம் பேசத் தரிக்க
கில்லேன்
பாவியேனுக் கிங்கே
போத ராயே
|