New Page 1

 

சேக்கிழார் வரலாறும் காலமும்

61

வேண்ட, அவரும் அதற்கு உடன்பட்டு நூற் பொருளை நன்கு விளக்கினார். 

     மன்னன் பெரிதும் மகிழ்ந்தான். ஏனையவரும் சேக்கிழாரது அடியார் பக்தியையும் அளவிறந்த கல்வியின் சிறப்பையும் போற்றிப் புகழ்ந்தனர்.  அரசன் சேக்கிழார்க்குத் தொண்டர் சீர் பரவுவார் என்ற பட்டத்தினையும் ஈந்தனன்.  பெரியபுராணமாம் திருத்தொண்டர் புராணத்தைச் சைவத் திருமுறைகள் பதினொன்றுடன் பன்னிரண்டாவது திருமுறையாகச் சேர்த்துப் பெருமை கொண்டனன்.  சேக்கிழார் பெருமானாரும் கூத்தப் பெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து அப்பெருமானாரது திருவடி நிழலில் சேர்ந்து இன்புற்றனர். 

       காலம் :  சேக்கிழார் பெருமானார் திகழ்ந்த காலம் கி. பி. 12-ஆம் நூற்றாண்டாகும்.  சேக்கிழார் பெருமானார் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்து இருந்தவர். இவனது காலம் கி. பி. 1123-1148.  இவனே அநபாயன் என்ற பெயருடையவன்.  இக்கருத்தை வரலாற்று அறிஞர்களும் கல்வெட்டு அறிஞர்களும் ஒருசேர ஒவ்வியுள்ளனர்.

       பொதுக் குறிப்பு :  தெய்வப் புலவர் என்ற சிறப்புப் பெயர் பெற்ற திருவள்ளுவர்போல, நம் சேக்கிழார் பெருமானாரும் தெய்வப் புலவர் என்ற பெருமைக்குரியவர்.  வேறு எவரும் இப்பெருமைக்கும் பட்டத்துக்கும் உரியவர்கள் அல்லர்.  சேக்கிழார், திருவள்ளுவரது பெருமை கூறும் திருவள்ளுவ மாலைபோலச் சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்ற நூலைப் பெற்ற பெருந்தகையார்.  தம்மீது உமாபதி சிவம் பாடிய தனிப் புராணத்தையும் பெற்றவர்.  இவ்விரு நூற்களும் நூலாசிரியரையும், நூலையும் புகழ்ந்து பேசுவன.  ஆனால், திருவள்ளுவ மாலை பல புலவர்களால் பாடப்பட்ட நூற் தொகுப்பாகும்.  சேக்கிழார் பிள்ளைத் தமிழ் ஒருவரால் புகழப்பட்ட பெருமையுடைய நூலாகும்.  என்றாலும்,