12

     நெற்றியிற் பூதிப்பொடி தூள்கள் பட்டாலும்
          நீங்காப் பிணியெல்லாம் நீங்கும் - வந்து
     சற்றே மிதித்தாலும் எல்லவர்க்கும் சிவ
          தன்மநினைவை யுண்டாக்கும் - பூர்வ
          கன்ம வினைகளைப் போக்கும் - மறு
          சென்ம மெடாமலே காக்கும்           (தில்லை)

இதுபோலவே மற்றைய சரணங்களும் சிவபக்தியையும் சிவபுண்ணியத்தையும்
எடுத்துக் கூறுகின்றன. இக்கீர்த்தனங்களால் கவிராயருடைய சைவசமயப் பற்று
இனிது விளங்கும்.