48

            வெட்டுக்களம் கண்டு முதுகையிடலாமோ
உலகிலே நன்மைசெய்ய இடையூறு மெத்தவரும்
காலம் போகும் வார்த்தை நிற்கும்
மலைவிழுந்தாலும் தலையே தாங்க வேணும்

திபதை 8     உடுத்த புடவைதானே பாம்பாய்க் கடித்ததுபோல
வேலிக்கு முள்ளிட என்காலுக்கு முள்ளாகவந்தது
பிள்ளையின் மடிமீது பெற்றவன் சீவன்விட்டால் பெருங்கதி
உண்டு

” 9         குளிக்கப் போயும் சேறுபூசிக் கொள்ளலாமோ
ஆனை ஏறியும் திட்டிவாசல் நுழைவானேன்
முதல் கோணல் முட்டக் கோணும்

” 10         எழுதாப் பொறிக்கு அழுதால் என்னதான்வரும்

தரு 13       தின்றாலல்லோ நஞ்சு கொல்லும்
ஓராயிரம் நட்சத்திரம் ஒரு சந்திரனாமோ

திபதை 11    கண்ணுக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது

” 12         இடறின காலிலே இடறும்
மலைதாங்கும் பாரத்தை மண்ணாங்கட்டி தாங்குமோ
தன்னினம் தன்னைக் காக்கும் வேலி பயிரைக்காக்கும்

தரு 18       மழைவிட்டும் தூவானம் விடவில்லை

ஆரணியகாண்டம்

தரு 1        தாயறியும் பிள்ளையை தாயையும் பிள்ளைஅறியும்
தாய்கண்டு பொறுக்காததை ஊரோ கண்டுபொறுக்கும்
 

திபதை 2     பஞ்சு பறந்தாலும் படியும் ஒருதேசம்

” 3         பொன்னின் குடத்துக்குப் பொட்டிட்டுப் பார்க்க வேணுமோ

” 4         கும்பிடப் போனதெய்வம் எதிரேவந்தது (போல)
தன்வீட்டு விளக்கென்று முத்தம் கொடுப்பாருண்டோ
ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் கருடனாமோ
உன்னைக் கிள்ளுக்கீரையா நினைத்தான்