51

தரு 17       சிறுமுள்ளுக் குத்தினால் அது கொண்டுமலை நோகுமோ
உழக்கிலே கிழக்கும் மேற்கும் காட்டி உறுக்கிறாய்
உடற்குள்ளே நாவழிக்கிறாய்
விரல் உரலானால் உரல் எப்படி யாகும்

திபதை 2     கோவம் வந்தாலும் தன்னையறியாச் சன்னதமுமுண்டோ

தரு 21       தேடிப்போன மருந்து காலில் அகப்பட்டது (போல)
செய்வார்க்குச் செய்வது செத்தபிறகோ

விருத்தம் 25  எள்ளும் கரும்பும் நசுக்கி உண்டாற்பலன்

தரு 23      நாய்தரக் கொள்ளுமோ சிங்கமும் பட்டம்
ஒதி பருத்தாலென்ன தூணாகுமோ

” 17         மின்மினிப் பூச்சி வெளிச்சத்திற்கு இருள்போமோ
எலி வேட்டைக்குத் தவிலடியா

” 31         அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களோ

” 32        கடலிலே பெருங்காயம் கரைத்தாலுண்டோ சாதகம்

” 39        சந்திரனைப் பார்த்து நாய்குலைத்தால் என்ன அதின்மகிமை
                                    கோணுமோ
மந்திரத்தால் மாங்காய் விழுமோடா?
மழைக்கோ குடை இடிக்கோ குடை?

” 41         தீட்டின  மரத்திலே கூர்பார்த்தான் என்பாரோ

திபதை 8     ரணசுக்கிரன் புறப்பட்ட கண்ணிலே இண்டைமுள்ளுத்
                              தைத்ததைப் போல

தரு 45      செல்வம் சொல்லுக்கு அஞ்சுமோ

திபதை 9     சோற்றிலே கல்லுப்பொறுக்க அறியேன் முகவனைக்குக்கல்
      எடுப்பேன் என்றசொல்லையோ நான் எடுத்தேன்

தரு 47      செப்பிலும் இல்லை பந்திலும் இல்லை உன்செயல்

திபதை 10    கைக்கெட்டினது வாய்க் கெட்டாமல்
ஏர்பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம்
காட்டில்எரித்தநிலா - கானலில் மழையாச்சே