81

சரணங்கள்

1.    சீதமதிவதனன் ஏதமில் சீயகங்கன்
          செய்த சகாயம் தன்னை     மதித்து-பவணந்தி
     சிறந்தநன் னூலிலவன் இறந்தும் இறவாமலே
          செய்தானே பாயிரத்துள்     பதித்து-பின்னும்
    தீதில் அருணகிரி நாதருக்குபகாரம்
         செய்து மனமகிழத்          துதித்து-பிரவுட
    தேவமகாராயனும் மேவித்திருப்புகழில்
         திகழ்ந்திருக்கப் பெற்றான்பார் குதித்து-நாளும்

   கோதில் மொழிகள்ராக வனைப்போல் மொழியும் சீலா
        குணசிகாமணி எனஎவரும் புகழும்      மேலா
        குணமில் பரமலோ பியர்பிரதி          கூலா
         குணம் உடையபுலவர் குலபரி          பாலா (செய்)

2.    சங்கையில்லா மலந்த கொங்கராயர் முன்செய்
          சகாயத்தினாவல்லவோ நற்றார் - வில்லிப்புத்தூரார்
     சந்திரசூரியர் உள்ள அளவும்தம் புகழ்நிற்க
          சயபாரதத்தில் பாடப்   பெற்றார் - கார்போற்சொரியும்
     அங்கை உடையதிரு வெண்ணெய் நல்லூர்ச்சடை
          யப்ப முதலியாரும்         கற்றார் - கம்பருக்குமுன்
    அகம் மகிழ்ந்திடவே சகாயம் செய்தேராமா
          யணத்தில் என்றைக்கும் நிலையுற்றார் - ஆதலினாலே
     மங்களமாம் செந்தோன்றி மாலைமருவும் மார்பா
          வைசிய குலமிலங்க வந்துதித்திடும் தீபா
     மதுரம் ஒழுகமிருது மொழிபகர்         பூபா
          வரும் இரவலர்மகிழ அருள்பிர    தாபா     (செய்)

3.   அழிவில் வேதங்கள் ஓதிக்கிழி அறுத்திட்டபெரி
          யாழ்வாருக் கோர்சகாயம்    புரிந்து - பல்லாண்டில்
     அகன்ற உலகீரேழ் உள்ளளவும் செல்வநம்பியும்
          அமர்ந்திருக்கின்றான் புகழ் விரிந்து - எங்கும்நிறைந்த
     வழுவில் மாயவன்பால் வாள்வலியால் மந்திரங்கொண்ட
          மங்கையர் கோனுக்குமுன்    பரிந்து-சகாயம்