பக்கம் எண் :

105

  கொலை
 
 
அரந்தைசூ ழினும்பொன் வவ்வும்
   அத்தொழிற் கியையா வண்ணம்
வரந்தர வேண்டு மென்னக்
   கடவுளை வழுத்தாய் நெஞ்சே.
  எந்நாளும் நீங்காத பல நோய் அடைந்து துன்புற்றாலும், கைஏந்திப் பிச்சை எடுக்கும்படி வறுமை வந்தாலும், சொல்லமுடியாத வருத்தம் ஏற்பட்டாலும் களவு செய்யும்படியான தீச்செயலுக்கு இசையாதபடி வாழ நெஞ்சமே ஆண்டவனை வணங்கித் தொழு.
  நிரந்தரம்-எந்நாளும். அயர்தல்-கவலைகொள்ளல். நிரப்பு-வறுமை. அரந்தை-துன்பம்.
 

8

  கொல்ல நினைத்தலும் கொடுமொழியும் கொலையே
216
உயிரினை வதைத்திடல் வதைக்க வுன்னுதல்
அயிலெனக் கொடியசொல் அறைத லெற்றல்வெண்
தயிருடை மத்தெனத் தாபம் பல்புரிந்து
அயலவர் ஆயுள்நாட் கழிவுண் டாக்குதல்.
உயிரைக் கொல்லுதல், கொல்ல நினைத்தல், கணைபோன்ற கொடிய சொற்களைக் கூறுதல், அடித்தல், தயிர்கடையும் மத்துப் போன்று பல துன்பஞ்செய்தல், அடுத்தார் வாழ்நாளைக் கெடுத்தல் முதலியவும் கொலையே.

வதைத்தல்-கொல்லுதல். உன்னல்-நினைத்தல். அயில்-கணை. எற்றல்-அடித்தல்.

கருவழித்தல் துன்பம் களையாமை கொலையே

கருவினை யழிக்குதல் கயமிங் கேனையார்
மருவிட விரும்புதல் மற்றன் னோரிடர்
ஒருவிட வகைசெயா தொழிதல் வெவ்விடஞ்
சருவினி லிடல்கொடுஞ் சமர்க்கு டன்படல்.
 
 
 
 
217