பக்கம் எண் :

107

  கொலை
 
  கொலை செய்வோரையும், கொன்றாலொத்த பெருந்துன்பம் செய்வோரையும் உயிர்ஒறுப்புச் செய்யும் உரிமை மணிமுடி தாங்கிய வேந்தர்கே யுளது. அதுவே முறைமையுமாகும். மற்று யார்க்கும் உயிர் ஒருப்புச் செய்யும் உரிமையிலை. செயின் அது முறைகேடுமாகும்.
  அலை-துன்பம். ஆவி-உயிர். நீதி-முறைமை. இதரர்-மற்றவர். உயிர் ஒறுப்பு-கொலை.
  5
  குருதிக் கறையாடை கூறும் கொலைஞனை
221
சுதமுறு முகத்தொடு சொல்லு மாற்றமும்
பதமுறு கறைக்கறை படிந்த வாடையும்
வதனையே காட்டலால் வதைம றைக்குதல்
உதயனைக் கரத்தினால் மறைத்தல் ஒக்குமே.
  பொலிவிழந்த முகத்துடன் தடுமாற்றமுள்ள சொல்லும், குருதிக்கறை படிந்த ஆடையும், கொலைஞன் இவன் என்று காட்டுதலால், கொலையை மறைப்பது கதிரவனைக் கையினால் ஒருவன் மறைப்பதையே ஒக்கும்.
  சுதம்-பொலிவின்மை. கறை-குருதி. வதன்-கொலைஞன். உதயன்-கதிரவன். கரம்-கை.
  6
  அரியது நிகழினும் கொலைஞன் உயர்தலரிது
222
பவமற மாயினும் பவர்க்க முத்தியாய்ச்
சிவமுறப் பொலியினுஞ் சிதைந்த ழிந்தவோர்
சவமுயிர் மேவினுந் தகையில் காதகர்
அவனியி லுயர்ந்திட லரிது நெஞ்சமே.
  மனமே, பாவம் புண்ணியமாக மாறினும் இருளுலகம் ஒளியுலகாய்ப் பேரின்பம் விளங்கினும், வெட்டுண்டு மாண்டழிந்த பிணம் மீண்டும் உயிர்பெற்று வாழினும் கொலைஞர் மேன்மை எய்துதல் இன்று.
 பவர்க்கம்-நரகம்; இருளுலகம். முத்தி-ஒளியுலகம். சிவம்-பேரின்பம். காதகன்-கொலைஞன்.
  7