பக்கம் எண் :

108

 நீதிநூல்
 
 குடும்பம் முற்றுங் கோறலாம் தலைவற் கோறல்
223
பத்தினி சேயரும் பரிச னங்களும்
தத்தம நிலைகெடத் தலைவ னைச்சமன்
ஒத்தவ னியிற்கொல லொருவன் றன்னையன்று
அத்தனை பேரையு மடுதல் போலுமே.
  மனைவி மக்கள் ஒக்கல் முதலிய அனைவர்களும் நிலைகெட்டு அழியும்படி அவர்களைப் பேணிக் காப்பாற்றிய குடும்பத்தலைவனை இயமனை யொத்து ஒருவன் கொன்றால், அக்கொலை அக்குடும்பம் முழுவதையுமே கொன்றதை யொக்கும்.
  பத்தினி-மனைவி. சேயர்-மக்கள். பரிசனம்-சுற்றத்தார்; ஒக்கல். சமன்-இயமன்.
 
8
  கொலைஞனை விருப்பாய்க் கூடுவான் எமன்
224
தீயிடை மூழ்கினோன் சிங்கி யுண்டவன்
மாய்விலா துய்யினும் வதனுய் யானமன்
ஆயதன் றொழில்புரி வோனை யன்பொடு
மேயதன் னுலகினுக் கீண்ட ழைக்குமே.
  தீக்குளித்தோனும் நஞ்சுண்டவனும் ஒருவேளை சாவாது பிழைத்தாலும், கொலைஞன் ஒருநாளும் எமனுக்குத் தப்பான். எமன் தன் தொழிலாகிய சாவினைச் செய்யும் கொலைஞனை மிகவும் அன்புடன் தன்னுலகுக்கு அழைத்துக்கொள்வான்.
  சிங்கி-நஞ்சு. வதன்-கொலைஞன்.
  9
  கொலையே பெரும்பாவம் விழுங்கும் கொடுநரகம்
225
சீவனை வதைசெயல் சிறந்த தாயுங்கால்
பாவமோ ரைந்தினுங் கொலைசெய் பாவியைப்
பூவல யம்பொறா தெரியும் பூதிதான்
ஆவன வாய்திறந் தவனை நுங்குமே.
  பொய் களவு கள் காமம் கொலை ஆகிய ஐம்பெருந் தீமைகளுள் கொலையே மிகக் கொடுமையானது. கொலைப் பாவியை நிலவுலகம் பொறாது. எரிந்துகொண்டிருக்கும் கொடிய நரகம் அவனை எடுத்து விழுங்கும்.