பக்கம் எண் :

109

  கொலை
 
  பூவலயம்-நிலவுலகம். பூதி-கொடிய நரகம். நுங்கும்-விழுங்கும்.
  10
  யார்க்கும் கொலைசெயும் உரிமை யின்று
226
அகந்தனை யுடையவ னழித்தல் நீதியெண்
இகந்தபல் லுயிரெலா மியற்றினோற் கன்றிச்
சகந்தனி லவைகளைத் தம்மைக் கொன்றிட
உகந்தபே ருரிமையீங் கொருவர்க் கில்லையால்.
 
வீட்டுக்குரியவன் அவ்வீட்டை அழிப்பது முறையாம். அதுபோல, அளவிறந்த பல உயிர்களையும் படைத்துக் காக்கின்ற கடவுள் துடைப்பது முறைமையாகும். கடவுளுக்கல்லாமல் வேறு ஒருவர்க்கும் அவ்வுயிர்களையேனும், தம்மையேனும் கொல்லும் உரிமையில்லை.
  அகம்-வீடு. அழித்தல்-துடைத்தல். நீதி-முறைமை. சகம்-உலகம்.
  11
  தடுக்க முடியாவிடில் தானுங் கொல்லுக
227
தனையெனி னும்பிறர் தம்மை யென்னினும்
முனையொடு கொலவரு முசுண்டன் தன்னுயிர்
இனைவதை செயலலா லுபாயம் வேறின்றேல்
அனையனைக் கொல்கநல் தீர்வும் ஆற்றுக.
  தன்னையாவது பிறவுயிர்களையாவது மற்றவன் செருக்குடன் கொல்ல வந்தால், அவனை எவ்வகை சூழ்ச்சியினாலாவது தடுக்க முடியாவிட்டால் கொல்லுக. கொலைப் பாவம் நீங்கக் கழுவாய் செய்க.
  முனை-செருக்கு. முசுண்டன்-கீழ்மகன். உபாயம்-சூழ்ச்சி.
 

12

  ------