| அதி. 18-மது. |
| அறியாமை நோய் மறதி கட்குடியால் ஆம் |
228 | ஞானமெய்ச் சுகம்புகழ் நலம்பெ றத்தனந் தானமே செய்குவர் தகுதி யோரறிவு ஈனமெய் மறதிநோ யிழிவு றப்பொருள் வானென வழங்குவர் மதுவுண் போர்களே. |
|
| |
| தக்கோர் மெய்யுணர்வு துன்பில்லாத இன்பம் பெரும்புகழ் உடல்நலம் அடைவதற்குத் தம் நற்பொருளை நல்லவர்க்குத் தானம் செய்வர். கள்ளுண்போர் அறிவின்மை, உடல்மறதி, நீங்கா நோய், வசை முதலியன பெருதற்குத் தங்கள் பொருளை மழைபோல் வாரி இறைப்பர். |
| ஞானம்-மெய்யுணர்வு. தனம்-பொருள். மது-கள். |
|
1 | | நஞ்சனைய கள்ளுண்பார் நாடுமனை மகவிழந்தார் |
229 | மருந்தநேர் மதுவுண்போர் மாண்ட பான்மையால் அருந்தவப் பாலருக் கப்ப னில்லையால் பொருந்திய மனையவள் பூண்ட நாண்களத் திருந்ததே யென்னினு மிழந்த தொக்குமே. |
|
| நஞ்சையொத்த கள்ளையுண்போர் இறந்தவரோ டொப்பர். அதனால், தவப்பேற்றால் வந்த பிள்ளைகளுக்குத் தந்தையரில்லை. மனைவிமார் கழுத்தில் தாலி காணப்பட்டாலும் தாலியிழந்தவர் நிலையேயாவர். |
| மருந்தம்-நஞ்சு. பாலர்-பிள்ளைகள். களம்-கழுத்து. |
| 2 |
| அறிவிழப்புச் சாவால் கள் நஞ்சினுங் கொடிதாம் |
230 | சித்தமு மவசமாஞ் செயல்வி கற்பமாம் நித்தமு மரணமா நெடிய துன்பமாம் அத்தமு நாசமா மவிழ்த மின்மையாற் பித்தினு நஞ்சினும் பெரிது கள்ளரோ. |
|
| கள்ளுண்பதால் உள்ளம் தன் வசமாவதில்லை; செய்யும் செயலும் தாறுமாறாகும்; அறிவிழந்து போவதால் நாளும் சாவாம்; சொல்லொணாப் பெருந்துன்பமாம்; பொருளழிவாகும். |