பக்கம் எண் :

111

 மது
 
 மாற்று மருந்து கிடையாது. பித்தையும் நஞ்சையும்விடக் கள் மிகவும் கொடியதாகும்.
 சித்தம்-உள்ளம். அவசம்-வசமின்மை; கட்டுக்கடங்காமை. அத்தம்-பொருள். அவிழ்தம்-மருந்து.
 3
 கள்ளுண்போர் கழிவுண்ணும் ஈயினை ஒப்போர்
231
பாலினைத் தேனையின் பாகை நீத்துவெண்
மாலியை மாந்துவோர் மலர்க்கள் நீத்துமெய்த்
தோலிர ணந்தனைச் சூத கந்தனைக்
கோலியுண் டுவக்குமீக் கூட்ட மொப்பரே.
 உயர்ந்த ஊணாகிய ஆன்பாலும் தேனும் வெல்லப்பாகும் விடுத்துக் கள்ளையுண்போர், ஈ மலரைவிட்டுப் புண்ணையும் கழிவுக் குருதியையும் வாரியுண்டு மகிழ்வதை யொப்பர்.
 இரணம்-புண். சூதகம்-கழிவுக்குருதி.
 4
 யாரையும் மருவச்செய் கள் மிக இழிவே
232
சீயென இகழ்தரு தேனுண் போர்களை
நாயெனக் கோகென வாக்கு நாடொறும்
ஆயினை மகளையில் லாக்குந் தான்கொண்ட
சேயிழை யையும்விலை செய்யச் செய்யுமால்.
 நல்லோரால் `சீழு என்று இகழப்படும் கள், தன்னை உண்போர்களை நாயையும் கழுதையையும்போல் மதிப்பில்லாதவராக்கும். தாய், மகள், முதலிய முறையினரை முறையிலாது மருவச்செய்யும். மணந்த மனைவியையும் விலைபடுத்தச்செய்யும்.
 ஆயினை-தாயை. கோகு-கழுதை.
 5
  தீமையை நன்மையெனத் திரிப்பது கள்ளே
233
மலந்தனை யமுதென மாந்தச் செய்திடும்
மலர்ந்தபூ வெனவன லள்ளச் செய்யும்வெஞ்
சலந்தரும் பகைவர்கை தனக்குள் ளாக்குநல்
நலந்தனை யழித்திடு நறவு நெஞ்சமே.