| நீதிநூல் |
| நெஞ்சமே! கள், மலத்தை அமுதென்று நினைத்து உண்ணச் செய்யும்; தணலை விரிந்த பூவென அள்ளச்செய்யும்; மிக்க சினத்தைத் தரும் பகைவர்களைத் தனக்குத் துணையாகச் சேர்க்கும்; நன்மையைக் கெடுக்கும். |
| மாந்த-உண்ண. அனல்-தணல். சலம்-சினம். நறவு-கள். |
| 6 |
| கள்ளுண்பார்க் குலகம் கடுநர காகும் |
234 |
அலருற ஈயெறும் பரவு தேளொடும் பலவிலங் கணுகுறப் படுத்த பாயலின் மலசல வாந்தியு மயக்குங் கோடலால் நிலமது நரகமாம் நிதங்கள் ளுண்பார்க்கே. |
| | பழியுண்டாக, ஈ, எறும்பு, பாம்பு, தேள், விலங்கு முதலியன தம்மை வந்து நெருங்க, படுத்த படுக்கையிலே மலம், சிறுநீர், கக்கலுண்டாகக் கள்ளுண்பார் அறிவிழந்து மயங்கிக் கிடத்தலால், அவர்களுக்கு என்றும் உலகம் நரகமேயாகும். |
| அலர்-பழி. நிதம்-என்றும். |
| 7 |
| கள்ளில் பிறப்பன கடுவினை பேராசை |
235 | கொஞ்சமுஞ் சுவையிலை குளத்தைக் கோணியே நஞ்சென நுகர்வர்மெய் நலிய மூப்புற விஞ்சிய ஆவல்தீ வினைகள் யாவுமே குஞ்சுகள் கள்ளெனுங் கொடிய பக்கிக்கே. |
|
| விரைவாக உடல்தளர மூப்புவர முகத்தைக்கோணி, சிறிதும் சுவையில்லாத கள்ளை நஞ்சுபோன்று உண்பார்கள். கள்ளாகிய கொடிய பறவைக்குப் பேராசை கொடுஞ்செயல் முதலிய எல்லாத் தீமையும் குஞ்சுகளாகும். |
| குளம்-நெற்றி; முகம். கோணல்-வெறுப்படையாளம். விஞ்சிய-பெருகிய. பக்கி-பறவை. |
| 8 |