| மது |
| வேறு |
| களவு மயக்கம் காமம் தருங் கள் |
236 | வறுமையால் களவு செய்வர் மையலாற் காமத் தாழ்வர் குறுமைசேர் பகையி னால்வெங் கொலைசெய்வர் வசையி னோடுஞ் சிறுமைதந் துயிரி ருந்துஞ் செத்தவ ராக்கி யிம்மை மறுமையை யழிக்குங் கள்ளை மாந்தலெப் பயன்வேட் டம்மா. |
|
| கள்ளுண்பவர்க்கு அக்கள்ளினாலே வறுமை விரைவில்வரும். அதனால் களவு செய்வர். அறிவிழந்து மயக்கங் கொள்ளுதலால் முறைதவறிக் காமந் துய்ப்பர். பொறுக்குந்தன்மை வாய்ந்த சிறு குற்றஞ் செய்தாரையும் பெரும் பகைவராக்கிக் கொலை செய்வர். பழியும் இழிவும் தரும். உயிரிருந்தும் செத்தவராவர். இம்மை மறுமைப் பயனிழப்பர். இப்படிப்பட்ட கள் அருந்துவது என்ன பயன் கருதி? |
|
மையல்-மயக்கம். குறுமை-சிறுமை. மாந்தல்-குடித்தல். வேட்டு-விரும்பி. | | 9 |
| வேறு |
| வழிநடைப் பிணமாகும் வரும் இழிவு கள்ளால் |
237 | நரிநாய் பறவை சூழவழி நடுவிற் கிடந்த சவமதனை உரியா ரிலரென் றிடுகாட்டுக் குடன்கொண் டேகிக் கட்டையில்வைத்து எரியா நின்றேன் பிணம்விழித்திஃ தின்தேன் மயக்கென் றியம்பிமெய்கொள் அரியை யவிக்கு முன்னமெழுந் தயற்கட் கடையுட் புகுந்ததுவே. |
|
| நீ.-8 |