| நீதிநூல் |
| கள்ளுண் களிப்பால் நரி, நாய், கழுகு, காகம் முதலியன சூழ நடுவழியில் சவமாய்க்கிடந்த ஓருடலை இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று கட்டையில் வைத்து எரிக்கச்செய்தோம். பிணம் விழித்து `இவ்வாறாயது கள்ளின் களிப்புழு என்று கூறிற்று. நாங்கள் தீயை அவிப்பதற்கு முன்னமே குடிகாரன் எழுந்து பக்கத்துக் கள்ளுக் கடைக்குள் சென்றனன். |
| மெய்-உடம்பு. அரி-தீ. |
| 10 |
|
மயக்கும் பொருளால் விரைவில் மாளுவர் | 238 | அரக்கும் அரக்கு மதுகஞ்ச மாதி யாக வறியாமை சுரக்குஞ் சரக்கைச் செய்தல்விற்றல் துணிந்து கொள்ளல் நுகர்தலெலாம் பரக்கும் பழியைப் பாவத்தைப் பயக்கு மத்தீத் தொழிற்கிசைவோர்க்கு இரக்குந் தொழிலும் ஆயுள்குறைந்து இறக்குந் தொழிலு மெய்துமால். |
|
| கள், தேன், கஞ்சா முதலிய குடித்தாருக்கு அறிவுமறைப்பைத் தரும். அப்பொருள்களைச் செய்தல் விற்றல் பழிக்கஞ்சாது வாங்கல் உண்டல் எல்லாம் பழி பாவத்தைத் தரும். இந்தத் தீய தொழிலுக்கு இணங்குவோர் வறுமையுற்றுப் பிச்சை எடுப்பர்; அகவை குறையும்; விரைவில் மாளுவர். |
| அரக்கும்-குடிக்கும். அரக்கு-கள். மது-தேன். கஞ்சம்-கஞ்சா. அகவை-வயது. |
| 11 |
| ------ |