| அதி. 19-சூது |
| சித்திரப் பெண்போல் செல்வம் சேரா சூதில் |
239 | வித்தமே மிகுமென வெஃகிச் சூதினில் அத்தமார் அத்தமும் அழித்தல் தீட்டிய சித்திர மாதெழி னம்பிச் சேர்ந்ததற் பத்தினி தனையகல் பான்மை யொக்குமே. |
|
| |
| சூதில் வரும் சிறுபொருளே மிகுமென்னும் ஆசையால் மலைபோன்ற பெரும் பொருளையும் இழத்தல், ஓவியத்தின் பெண்ணழகை நம்பிச் சேர்ந்த கற்புறு மனைவியைக் கை விட்டது ஒக்கும். |
| வித்தம்-சிறுதாயம்; சூதாட்டப் பொருள். அத்தம்-மலை. ஆர்-போன்ற; அத்தம்-பொன்; பொருள். எழில்-அழகு. பத்தினி-கற்புறு மனைவி. |
|
1 | | கல்லாது சூதினிற் காலம் போக்கல் இழிவே |
240 | வையமேன் மானிடர் வாழும் நாட்சில ஐயமில் கேள்விதான் அளவில ஆருயிர் உய்யநல் வினைகளை உஞற்றி டாதுநாள் பொய்யமர் சூதினிற் போக்கல் புன்மையே. |
|
| உலகத்தில் மக்கள் வாழும் நாட்கள் சில; கேட்டுணர்ந்து ஒழுக வேண்டிய நூல்கள் அளவில்லன. அறிவு நிரம்பும் உயிர் ஈடேற ஒவ்வொரு நாளும் நன்மைகளைச் செய்யாது பொய்ச் சூதினில் காலம் போக்கல் இழிவாகும். |
| வையம்-உலகம். கேள்வி-நூல். உஞற்றல்-செய்தல். புன்மை-இழிவு. |
| 2 |
| புண்ணியமிலாதார் சூதால் போது போக்குவர் |
241 | ஓத விசையொடு மோடு நாளென மேதையர் தந்தொழில் விடாது செய்குவர் போதுநீட் டித்தெனப் பொறியி லாரதைச் சூதெனும் வாள்கொடு துணிக்க நேர்வரே. |
|
| அறிவான் மிக்கவர் சொல்ல முடியாத விரைவுடன் நாள் போகின்றதென்று தானமும் தவமும் ஆகிய தம் தொழிலை இடைவிடாதுசெய்வர். புண்ணியப்பேறு இல்லாதார் பொழுது |