| நீதிநூல் |
| போகவில்லையென்று கருதி நீண்ட பொழுதைச் சூதாகிய வாளினால் வெட்டுவர். |
| ஓதரு-சொல்ல முடியாத. விசை-விரைவு. மேதையர்-அறிவான் மிக்கவர். போது-பொழுது. பொறி-புண்ணியம். |
| 3 |
|
அளவிலாத் தீமையை ஆற்றும் சூது | 242 | வளமலி நிடதநா டளிக்கு மாண்புசேர் நளனையும் அலைவுசெய் நாசச் சூதுதான் களவுபொய் சினம்பகை காம மியாவையும் அளவறப் பயிற்றிடும் ஐயன் போலுமே. |
|
| செழிப்புமிக்க நிடத நாட்டை யாண்ட சிறப்புப்பொருந்திய மன்னர்மன்னனாகிய நளனையும், சூது பெருந்துன்பம் எய்தும்படி செய்தது. அச் சூது களவு, பொய், சினம், பகை, காமம் முதலிய தீமைகளுக்கெல்லாம் தந்தையாகும். |
| வளம்-செழிப்பு. மாண்பு-சிறப்பு. அலைவு-துன்பம். |
| 4 |
| மனைவி மாளினும் சூதன் மனமகிழ்ந்தாடுவான் |
243 | கவறினை யாடுவோன் காந்தை வீயினுஞ் சவமதில் வழிசெலு மென்று தானெழான் அவள்புனை தாலிபந் தயத்துக் காமென உவகைபூத் தாடுவா னுயர்வு றானரோ. |
|
| சூதாடுவோன் தன் அருமையான மனைவி மாண்டாலும் அச் சூதாட்டத்தினின்றும் எழுந்திரான். மேலும் அப்பிணம் இவ்வழிதானே வரும் என்றுங் கூறுவான். அம் மாட்டோ, அவள் தாலி சூதாடும் ஒட்டத்துக்கு ஆகும் என்று மனமகிழ்வான். ஒருகாலும் மேன்மை அடையான். |
| கவறு-சூது. காந்தை-மனைவி. வீதல்-சாதல். பந்தயம்-ஒட்டம். உவகை-மனமகிழ்வு. உயர்வு-மேன்மை. |
| 5 |
| வேறு |
| அளவில் ஆசையாற் பொருளெலாம் சூதிலிழப்பர் |
244 | வட்ட மாநில மீதுமன் னார்விடம் இட்ட பாலை யினிதளித் தாலெனக் கட்ட மேவுங் கழகத்தில் வென்றுகொள் ஒட்டங் கையினி லொட்ட மளிக்குமால். |
|