பக்கம் எண் :

117

  சூது
 
  உருண்ட பெரிய உலகத்தில் உணவாகப் பகைவர், நிறைந்த நஞ்சு கலந்த பாலைத் தருவதுபோலத் துன்பமே பெருகும். சூதாடும் இடத்தில் வெற்றியால் கிடைத்த பந்தயப்பொருள் மேலும் மேலும் பொருளிழக்கும் ஆசையை உண்டாக்கிக் கையில் ஓட்டைத் தரும்.
  மன்னார்-பகைவர். கட்டம்-துன்பம். கழகம்-சூதாடுமிடம். ஒட்டம்-ஆசை. ஒட்டு-ஓடு.
  6
 
கவலை தரலால் சூதுக்கு கவறெனும் பேர் காரணப்பேர்
245
இவற லேதந் திழிவையுந் தந்துபின்
தவறு யாவையுந் தந்துநெஞ் சந்தனைக்
கவறென் னேவிக் கலக்கங் கொடுத்தலாற்
கவறெ னும்பெயர் காரண நாமமே.
  பேராசையைத் தந்து, இழிவையும் கொடுத்து மேலும் எல்லாப் பிழைகளையும் நிறைத்து மனத்தை வருந்தும்படி தூண்டி நீங்காக் கவலையைக் கொடுத்தலால் சூதாட்டத்திற்குக் `கவலைழு என்னும் பொருள் தரும் `கவழுறென்னும் பெயர் காரணப் பெயரேயாகும்.
  இவறல்-பேராசை. தவறு-பிழை; குற்றம். கவறு-கவலை கொள்.
  7
  போர்க்கும் பழிக்கும் புகலிடம் சூதே
246
பந்த யந்தனைப் பற்றிவெஞ் சூதினோடு
எந்த ஆடற் கெனினும் இயைபவர்
வந்த சீர்நல மாறிவ யாவுக்கு
நிந்த னைக்கு நிலையம தாவரால்.
  பந்தயப்பொருளை விரும்பிக் கொடுஞ் சூதாட்டத்தை யாடுபவர், போர் முதலிய தீமைக்கும் இணங்குபவராவர். அவர்களுக்குள்ள மேன்மை நன்மை எல்லாம் நீங்கும். வருத்தம் பழி முதலியவற்றிற்கு உறைவிடம் ஆவர்.
  சீர்-மேன்மை. வயா-வருத்தம். நிலையம்-உறைவிடம்.
  8
------