| அதி. 20-கைக்கூலி |
| கைக்கூலி வாங்குவோர் காணார் நடுநிலை |
247 | வலியினால் இலஞ்சங்கொள் மாந்தர்பாற் சென்று மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய எலிகள்மார்ச் சாலத்தி னிடத்தும் மாக்கள்வெம் புலியிடத் தினுஞ்சரண் புகுத லொக்குமே. |
|
|
அரசியல் முதன்மை வலியினால் கைக்கூலி வாங்கும் கொடிய மக்களிடம் சென்று எளியவர் வழக்கைச் சொல்லுவது, பசியால் வாடிய எலிகள் பூனையிடமும், விலங்குகள் புலியினிடத்தும் போய் அடைக்கலம் புகுவதை யொக்கும்.கவலை தரலால் சூதுக்கு கவறெனும் பேர் காரணப்பேர் | | முதன்மை-அதிகாரம். இலஞ்சம்-கைக்கூலி. மார்ச்சாலம்-பூனை. சரண்-அடைக்கலம். |
| 1 |
| கைக்கூலி வாங்குவோரைக் கொன்றாலும் போதாது |
248 | அல்லினிற் களவுசெய் பவரை வெஞ்சிறை யில்லிடும் பண்பினுக் கியைந்த மாக்களே எல்லினி லெவரையும் ஏய்த்து வவ்வலாற் கொல்லினும் போதுமோ கொடியர் தம்மையே. |
|
| இராக்காலங்களில் களவு செய்யும் கள்வரைச் சிறையிடும் முறைமன்ற நடுவரே, பகற்காலத்தில் எல்லோரையும் ஏமாற்றிக் கைக்கூலி வாங்குகின்றனர். இக் கொடியவரைக் கொன்றாலும் அக் குற்றத்திற்குப் பொருந்திய தண்டனையாகுமா? |
| அல்-இரவு. வெஞ்சிறை-கடுங்காவல். எல்-பகல். |
| 2 |
| உலகிய லழிப்பர்பால் உறும்பழி பாவம் |
249 | கொலைஞருஞ் சோரருங் கொடிய வஞ்சரும் நிலைபெற வவர்கையி னிதியைக் கொண்டுதண் அலைகட லுலகிய லழிக்குந் தீயர்பால் மலையெனப் பாவமும் பழியு மண்டுமே. |
|
| உலகில் கொலை செய்வோரும் கள்வரும் கொடிய வஞ்சகரும் நிலைபெறும்படி, அவர்கள் கையில் கைக்கூலி வாங்கிக் |