| கைக்கூலி |
| கொண்டு உலகவாழ்வைக் கெடுக்கும் முறைமன்றக் கொடியவர்பால் பாவமும் பழியும் மலைபோல் பெருகும். |
| சோரர்-கள்வர். நிதி-செல்வம். மண்டும்-பெருகும். |
| 3 |
| கனலுறும் வெண்ணெய்போல் கைக்கூலி அழியும் |
250 |
பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மைபோற் செயிருற நீதியைச் சிதைத்தோர் தீயன்சாண் வயிறினை வளர்த்திட வாங்கு மாநிதி வெயிலுறு வெண்ணெய்போல் விளியும் உண்மையே. |
| | வேலியே பயிரை அழிப்பதுபோல் முறையைச் செய்யும் தலைவன் அதைக் கெடுத்துச் சாண்வயிறு வளர்ப்பதற்குக் கைக்கூலி வாங்கித் தீயவனாகின்றான். அத்தீயோன் வாங்கும் பெரும்பொருளும் வெயிலில் பொருந்திய வெண்ணெய்போல் கெடும். |
| மாநிதி-பெரும்பொருள். விளியும்-கெடும். |
| 4 |
| கைக்கூலி வாங்குவோன் கயவரின் அடிமை |
251 | ஆசையால் வாங்கிடு மவனை யீந்தவர் கேசமா மதிப்பரக் கீழ்நன் சென்னிதம் ஆசன மாக்குவ ரடிமை நானெனச் சாசன மவர்க்கவன் தந்த தென்னவே. |
|
| பேராசையால் கைக்கூலி வாங்கும் கயவனை, கைக்கூலி கொடுத்தவர் `தலையினிழிந்த மயிழுரென மதிப்பர். அவன் தலையைத் தாம் இருக்கும் இருக்கையாக்குவர். அவன் கைக்கூலி பெற்றுக் கொண்டது, தன்னை அடிமைப்படுத்தி எழுதிக் கொடுத்த அடிமை முறியாகும். |
| ஈந்தவர்-கொடுத்தவர். கேசம்-மயிர். ஆசனம்-இருக்கை. சாசனம்-எழுத்துமுறி. |
| 5 |
| கடையனாம் வேசையினும் கைக்கூலி பெறுவோன் |
252 | காசதி கந்தனைக் கருதி வாதந்தீர்ந்து ஏசுற ஏழைகட் கிடர்செய் வோன்தனம் மீசரங் குறைவுபா ராது மேவிடுந் தாசிய ரினுமிழி தகவு ளானன்றோ. |
|