| நீதுநூல் |
| மிகுந்த கைக்கூலி தருபவர்க்கு வாசியாக வழக்கைத் தீர்த்து அதனால் ஏழைகள் வயிறெரிந்து ஏசும்படி அவர்களுக்குத் துன்பம் செய்வோன், உயர்வு தணிவு கருதாது பணம் ஒன்றே கருதிக்கூடும் வேசையிரினும் இழிந்தவனாவன். |
| வாதம்-வழக்கு. தனம்-பொருள். மீசரம்-உயர்வு. |
| 6 |
|
வழக்கிடாது மனமொத்துப் பங்கிடல் மாண்பு | 253 | எனதுன தெனவொரு பொருட்கு இரண்டுபேர் சினமொடு வாதித்தோர் தீயன் பாற்செலின் தனதென அப்பொருள் தனைக்கொள் வானவர் மனதொரு மித்ததை வகிர்தன் மாண்பரோ. |
|
| ஒரு பொருளை `என்னுடையது என்னுடையதுழு என்று இருவர் சினமுற்று வழக்கிட்டு, அதை முடிவுசெய்யத் தீயவனிடம் சென்றால், அவன் அப் பொருளைத் தனதெனச் சொல்லிப் பிடுங்கிக் கொள்வன். அதனால், இருவரும் தம்முள் மனமொத்துப் பங்கிட்டுக்கொள்வதே நன்மையாம். |
| வாதித்தல்-வழக்கிடல். வகிர்தல்-பங்கிடல். மாண்பு-நன்மை. |
| 7 |
| கைக்கூலிப் பழிசொலக் காணா வோர்வாய் |
254 | பசியினா லெளியனோர் பகலி ரப்பினும் அசியுறு மெங்கணும் ஆக்க முள்ளவர் நிசிபகல் பலரிட நிதமுமேற் கின்ற வசையினைச் சொல்லவோர் வாயும் போதுமோ. |
|
| எளியவன் பொறுக்க முடியாத பசியினால் ஒருபொழுது பிச்சை எடுப்பான். அவனை எல்லோரும் இகழ்வர். செல்வமும் முதன்மையும் உடையவர் இரவு பகலாக எல்லாரிடத்தும் கைக்கூலி பெறுமுறையில் ஏற்கின்றார்கள். இதனால் வரும் இழிவையும் பழியையும் ஒரு வாயால் சொல்ல முடியுமா? (முடியாது.) |
| அசி-இகழ்ச்சிச் சிரிப்பு. நிசி-இரவு. வசை-பழி. |
| 8 |