| கைக்கூலி |
| ஈந்தோர்க்கெலாம் கைக்கூலி ஏற்போன் பிள்ளை |
255 | பெற்றவன் கைப்பொருள் பிள்ளைக் கேயலான் மற்றவர்க் கிலையெனன் மனுவி னீதியாம் குற்றமே விடநிதி கோடி பேர்கையிற் பற்றுவோ னவர்க்கெலாம் பாலன் போலுமே. |
|
| பெற்றவர் பொருள் பிள்ளைகளுக்கே உரிமை என்பது மனுமுறை. கைக்கூலி பெறுவான் பாவம் பெருகக் கோடி பேர் கையில் பொருள் ஏற்கின்றான். ஆயின், அவன் அக் கோடிபேருக்கும் பிறந்தவன் ஆவான் போலும். |
|
மனு-சட்டம் வகுக்கும் வேந்து. நீதி-முறைமை. குற்றம்-பாவம். நிதி-பொருள். | | 9 |
| வேறு |
| மானமழியாது தொண்டுசெய்து வாழ்வதே மதிப்பு |
256 | மண்டலீ கன்றன் தண்டனை நரகவ மானங் கண்டபேர்க் கெலாம் பயம்பெரும் பகையொடும் கவ்வை பண்ட மிவ்வகை யீட்டலின் அனுதினம் பலரை அண்டி மானமாத் தொண்டுசெய் துயிருயல் அழகே. |
|
| கைக்கூலி வங்குதலால் இம்மையில் மன்னர் ஒறுப்பு, மதிப்பின்மை, யாரைக் காணினும் நடுக்கம், ஊர்ப்பகை, நீங்காத்துன்பம் நாளும் பெருகும். மறுமையில் இருளுலகத் துன்பமும் எய்தும். இவற்றைவிட்டுப் பலரையும் அடுத்து மானமழியாது இயன்ற தொண்டு செய்து வாழ்தல் அழகாகும். |
| மண்டலீகன்-மன்னன். நரகு-இருளுலகம். கவ்வை-துன்பம். |
| 10 |
| வேறு |
| இருகையும் கைக்கூலி ஏற்றல் முழுக்கொள்ளை |
257 | இருவ ரிடத்தும் விவாதநிதிக் கிரட்டி கொள்வர் தகாதென்னின் அருமை சயமென் பார்தோல்வி யடைந்தோன் தந்த நிதிகேட்பின் |
|