| அதி. 21-புறங்கூறல் |
| பழியஞ்சும் பண்பினர் பகரார் புறங்கூறல் |
262 | சாம்பிணம் இடுவனஞ் சாருந் துன்மணம் பூம்பொழில் பரிமளம் பொருந்தி நாறிடும் தாம்பழி யுளரலால் தகுதி யோர்பிறர் நோம்படி யவர்குறை நுவலு வார்களோ. |
|
| செத்த பிணத்தை இடுதலும் சுடுதலும் செய்யும் காடு தீய நாற்றமே நாறும். அழகிய தேனிறை மலரும் தீங்கனியும் பொருந்திய சோலை நல்ல மணமே தரும். பிறர் மனம் வருந்தும்படி அவர் குறையை அவரில்லாத இடத்துச் சொல்லுதலாகிய புறங்கூறுதலை தக்கவர் கூறார்; கூறின், புறங்கூறுவார் மேல் பழி சுற்றும் என்னும் உண்மை உணர்தலான். |
|
வனம்-காடு. பொழில்-சோலை. உளரல்-சுற்றுதல். | | 1 |
| புறங்கூறுவோன் குலநலம் பொருந்தாப் புன்மையன் |
263 | நலத்தின்மிக் கார்சொலார் நயமில் சொல்லையே சொலத்தகாப் பழிபிறர் மீது சொல்லுவோன் குலத்தினு நலத்தினுங் குறையு ளானெனத் தலத்தவன் வாய்மொழி சாட்சி யாகுமே. |
|
| நன்மை மிகுந்தவர் கடுமையான சொல்லைச் சொல்லார். பிறர்பால் சொல்லக் கூடாத பழமொழிகளைப் புறங்கூறுபவன் உயர்ந்த ஒழுக்கமும் சிறந்த பண்பும் இல்லாதவன் ஆவன். இதற்கு உலகில் புறங்கூறுதலாகிய அவன் வாய்மொழியே சான்று பகரும். |
| குலம்-உயர்ந்த ஒழுக்கம். நலம்-சிறந்த பண்பு. தலம்-உலகம். சாட்சி-சான்று. |
| 2 |
| புறங்கூற லாலுள்ளப் புன்மை வெளியாம் |
264 | உள்ளவங் கணங்கசிந் தோடல் போலொரு கள்ளநெஞ் சினன்புறங் கழற லன்னவன் உள்ளமார் புரையெலாம் ஒழுகி வாய்மொழி வெள்ளமாய் வழிகின்ற விதத்தை மானுமே. |
|