| புறங்கூறல் |
| வஞ்ச நெஞ்சுடையவன் புறங்கூறுதல், அவனுடைய உள்ளத்திலுள்ள தீமைகளெல்லாம் வாய்வழியாக வழிந்தோடுவதாம். அது, சாக்கடை கசிந்தோடுவதை யொக்கும். |
| அங்கணம்-சாக்கடை. புறங்கழறல்-புறங்கூறுதல். புரை-தீமை. மானும்-ஒக்கும். |
| 3 |
| மெய்யே புறங்கூறினும் வேண்டாப்பொய் ஆகும். |
265 |
இன்னலே யேதிலார்க் கிழைக்கு மச்சொலே முன்னமெய் யென்னினும் முழுப்பொய் போலுமாம் அன்னவர் குறையினை யறிந்து மின்றெனப் பன்னுபொய் மெய்யினும் பாடு டைத்தரோ. |
| | பிறர்க்குத் துன்பம் தரக்கூடிய சொல், வாய்மையாக இருப்பினும் பொய்ம்மையாம். அவருடைய குற்றத்தை உணர்ந்தும், இல்லையென்று பொய் சொல்வது மெய்ம்மையாம். |
| இன்னல்-துன்பம். |
| 4 |
| வேறு |
| சான்றினில் குற்றம் கூறுதல் தகுமால் |
266 | ஆட்சியா முலகரசன்முன் சாட்சிசொல் சமையத்தலான் மாட்சியோர் பிறர்மறுவினை நீட்சியா நிகழ்த்தார்களே. |
|
| உலகாள் வேந்தன் முன் சான்று சொல்லும்போது மட்டும் பிறர் குற்றத்தை எடுத்துச் சொல்லுவார். மற்று எவ்விடத்தும் எக்காலத்தும் பிறர் குற்றத்தை எடுத்துக் கூறார். |
| ஆட்சி-ஆளுவது.மறு-குற்றம்.நிகழ்த்தார்-சொல்லார். |
| 5 |
| புறங்கூறார் கடமை பொன்றாப் புலவர் |
267 | மதியிலார் செய்வடுஅவர் எதிரினின் றியம்பினும் முதுகினின்று மொழிவரோ விதியுணர்ந்த விபுதரே. |
|