| நீதிநூல் |
| முறையுணர்ந்த நல்லறிஞர், அறிவிலார் செய்யும் பழியினை அவர் முன்னின்று கூறினும் அவரில்லாத இடத்துக் கூறார். |
| வடு-பழி. முதுகு-புறம்; இல்லாத இடம். விதி-முறை. விபுதர்-அறிஞர். |
| 6 |
|
புறங்கூறுவோனைப் புறத்தாக்கல் கோன்முறை | 268 | ஒருவ னொருவன் குறையையுரைத் திடவே யதனைக் கேட்டோர்கள் பெருக பத்தங் கலந்துபல பேருக் குரைக்க விவ்வாறே மருவி யெங்கும் பரவுதலான் மண்ணின் முன்னம் தூறுமவன் குருநோ யொப்பா னவனைக்கோ னூர்விட் டகற்றல் நன்றேயாம். |
|
| பிறன் குறையை ஒருவன் கூறினால், அதைக் கேட்டோர்கள் பொருந்தாதன மிகவுங் கலந்து பலபேருக்குக் கூறுவார்கள். இம் முறையாக உலகெங்கும் அது பரவும். ஆதலின், மண்மேல் முதலில் புறங் கூறுபவன் தொத்துப் பிணியாம் அம்மை நோயை ஒப்பான். அவனை ஊரைவிட்டு அகற்றுதல் நன்மையாம். |
| பெருகு-மிகவும். அபத்தம்-பொருந்தாதன. தூறல்-புறங் கூறல். குரு-அம்மைநோய். |
| 7 |
| வேறு |
| புறங்கூற்றாளர் பொல்லாப் பகைஞர் |
269 | வாட்படைவாங் குவரிலரேன் மாறுவரார் புறங்கூற்றைக் கேட்பவர்தா மிலரென்னிற் கிளப்பவரார் பிறன்பழியை வேட்பொடுசொல் வோரவதற்கு மேவலரென் றுனியதனைக் கோட்புறலி லாதுசினங் கொண்டகற்றல் நெறியாமே. |
|
| வாளாயுதத்தை வாங்குவாரில்லாவிட்டால் விற்பவரும் இல்லை. அதுபோல், புறங்கூறுதலைக் கேட்பவரில்லா விட்டால், சொல்வாரும் இல்லை. விரும்பிப் புறங் கூறுவோர் கூறப்படுவார்க்குப் பகைவரென நினைத்து அதனைக் கொள்ளுதலில்லாது அவரைச் சினந்து அகற்றுதல் முறையாம். |
| மாறுவார்-விற்பார். வேட்பொடு-விருப்பொடு. |
| 8 |
| ------ |