| அதி. 22-பெரியோரைத் தூறல் |
| பெரியோர் புகழை மாசுறப் பேசல் பெரும்பிழை |
270 | அரிய குணஞ்சேர் பெரியர் தமக்கு அமையக் கடல்சூழ் புவனமெங்கும் விரியும் இசைமா கறவர்மேல் விளம்பும் பொய்ச்சொல் அண்டமிசைத் திரியும் பானுக் கிரணமதைத் திரட்டிப் பற்றி அதன்மீது கரியைப் பூச வேண்டுமெனக் கருதுந் தன்மை பொருவுமால். |
|
| பெரியோர்க்கு அரிய குணங்கள் பல பொருந்துதலால், கடல்சூழ் உலகமெங்கும் அவர் புகழ் பரவுகின்றது. அப்புகழைக் கறைப்படுத்த அவர்மேல் பொய்ப்பழி கூறுகின்றனர். அது ஞாயிற்றின் கதிரைச் சேர்த்துப் பிடித்து அதன்மீது கரியைப் பூசவேண்டுமென்று எண்ணுவதை யொக்கும். |
|
அமைதல்-பொருந்தல். புவனம்-உலகம். இசை-புகழ். அண்டம்-உலகம். பானு-ஞாயிறு. கிரணம்-கதிர். பொருவும்-ஒக்கும்.பானு-ஞாயிறு. கிரணம்-கதிர். பொருவும்-ஒக்கும். | | 1 |
| பெரியோரைப் பழிப்போன்மேல் பெய்யும் அப்பழி |
271 | காற்றின் எதிரே நின்றொருவன் காறி உமிழும் உச்சிட்டம் மாற்றி யவன்மேல் வந்துவிழும் வாய்மை போலித் தாரணியில் தோற்றி யொழியும் வாழ்வதனைத் துறந்த மேலோர் மீதொருவன் தூற்றிக் கூறும் வசைச்சொற்கள் சொன்னோன் மீதே தோயுமால். |
|
| ஒருவன் காற்றுக்கு எதிராக நின்றுகொண்டு காறித்துப்பும் எச்சில் அவன்மேல் வந்து விழுவதுபோல், உலகில் `காமவெகுளி |