| நீதிநூல் |
| மயக்கங்கள்ழு அற்ற பெரியோர்மேல் பழிச் சொற்களைச் சொன்னால் அச் சொற்கள் சொன்னவன்மீதே சாரும். |
| உச்சிட்டம்-எச்சில். வசை-பழி. தோயும்-சாரும். |
| 2 |
|
ஆன்றோர்மேல் சொல்பழியை அறிவுடையார் கொள்ளார் | 272 | கடலனலுற்று எரிந்ததென்றுங் கதிர்குளிர்நோ யுற்றதென்றுந் தடவரையே சாய்ந்ததென்றுஞ் சாற்றுமொழி நம்புவரார் திடமுடைய சான்றோர்மேற் செப்புமவ தூறதனைப் புடவிமிசை வாழறிஞர் பொய்யெனவே தள்ளுவரால். |
|
| கடலில் தீப்பற்றி எரிந்ததென்றும், கதிரவன் குளிர் நோயுற்றானென்றும், பெருமலை அடியோடு சாய்ந்ததென்றும் ஒருவன் சொன்னால், அதனை நம்புவார் யார்? ஒருவருமிலர். அதுபோலவே உரனுடைய பெரியார்மேல் ஒருவன் பழி சொன்னால் அதனை அறிவுடையார் பொய்யெனவே தள்ளுவர். |
| திடம்-உரன். அவதூறு-பழி. புடவி-உலகம். |
| 3 |
| தீயோர் தூயோரைத் தேறுவர் தம்போல் |
273 | வய்கைக்கு நோயினர்க்கே மாமதுவுங் கைப்பாகுங் காய்வெயுலு மஞ்சணிறங் காமாலைக் கண்ணருக்கே சாய்நிழலுஞ் சுடுவெயிலாந் தாபச் சுரத்தினர்க்கே தீயவர்க்குத் தூயவருந் தீயவர்போற் றோன்றுவரே. |
|
| வாய் கசக்கும் பித்தநோய் உடையார்க்கு கொம்புத்தேனும் கசக்கும். காமாலைக் கண்நோய் உடையார்க்கு நடுப்பகல் வெயிலும் மஞ்சள் நிறமாகக் காணப்படும். காமச்சுர நோயுடையார்க்கு மாலை வெயிலும் உச்சி வெயில்போல் மிக்க சூடாம். தீயவர்களுக்கு நல்லவர்களும் தீயவர்கள் போன்றே காணப்படுவர். |
| மாமது-பெருந்தேன்; கொம்புத்தேன். தாபம்-காமம். தூயவர்-நல்லவர். |
| 4 |