| அவையடக்கம் |
| பசுவை நோக்காது பாலைக் கொள்வதுபோல் பாட்டை நோக்காது பயனைக் கொள்க. |
4 | பயன்கொள்வோ ரதனை நல்கும் பசுவுரு விலதென் றோரார் வியன்சினை வளைவு நோக்கார் விளைந்தீங் கனிப றிப்போர் கயங்கொள்சே றகற்றித் தெண்ணீர் கைக் கொள்வா ரென்ன நூலின் நயன்கொள்வ தன்றிப் பாவி னவையைநோக் கார்மே லோரே. |
|
| பாலும் பழமும் தண்ணீரும் விரும்புவோர் பசுவுருவும் மரவளைவும் சேற்றுக் கலப்பும் கருதாது கொள்வதுபோல் முறையுணர்வோர் பாட்டின் குற்றம் கருதாது பயன் கொள்வார். |
| கயம்-குளம். நயன்-முறை. நவை-குற்றம். |
| 4 |
| கடலுக்கு நீர் தரும் மழைபோல் கற்பித்தாரிடத்தே ஒப்புவித்தேன் |
5 | வேலைவா யுண்ட நீரை மேகஞ்சிந் தினுமே சிந்துங் காலிடைக் கொண்ட நீரைக் கழனியக் காற்கு நல்கும் பாலர்கற் றவையா சான்பாற் பகர்வர்யான் நாலு ணர்ந்த சீலர்பாற் கற்றதன்னோர் செவியுற நவின்றே னம்ம. |
|
| மேகம் வயல் மாணாக்கர் மூவரும் முறையே கடலிற் கொண்ட நீரைக் கடலுக்கும், வாய்க்கால் வழிக் கொண்ட நீரை வாய்க்காலுக்கும், ஆசான்பாற் கற்றவற்றை ஆசானுக்கும் ஏற்பிப்பது போல் யானும் பெரியவர்பால் கற்றவற்றை அவர்களிடமே கூறுகின்றேன். |
| வேலை-கடல். சிந்து-கடல். கழனி-வயல். கால்-வாய்க்கால். சிலர்-நல்லொழுக்கப் பெரியோர் |
| 5 |
| முறையைப் பழிப்பதாம் என் பாட்டைப் பழிப்பது |
6 | கோவிலைப் பழிக்கி னோரெண் குணனையும் பழித்த தொப்பாம் காவினைப் பழிக்கின் ஆண்டார் கடிமலர்ப் பழித்த தொப்பாம் |
|