பக்கம் எண் :

14

 நீதிநூல்
 
 
வாவியைப் பழிக்கிற் கொண்ட வண்புனல்
   பழித்த தாமென்
பாவினைப் பழிக்கி னீதிப் பயனையும்
   பழித்த தாமே.
  கோவிலைப்பழிப்பது கடவுளைப் பழிப்பதாகும்; சோலையைப் பழிப்பது பூவைப் பழிப்பதாகும்; குளத்தைப் பழிப்பது தண்ணீரைப் பழிப்பதாகும். (இவைபோன்றே) என் பாட்டினைப் பழிப்பது நீதி முறையையே பழிப்பதாகும்.
 எண்குணன்-கடவுள். கா-சோலை. பா-பாட்டு.
 

6

  எண்குணம்; தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல். பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை.
 

_____