| கடிம்பற்று |
| புதைக்கும் புல்லரை பொருள் குடி கெடுக்கும் |
279 | சொல்லவோர் போக்கின்றிச் செறிந்த நீர்கனல் இல்லமே யழித்தெழுந் தேகல் போற்செலவு இல்லையென் றடைத்தபொன் னெழுத்து தன்னைக்கொள் புல்லரைக் குடிகெடுத் தகன்று போகுமே. |
|
| போக்கிடமில்லா நீரும் நெருப்பும் தாமுள்ள வீட்டை அழித்துச் செல்லும். அவைபோல், செலவில்லையென்று புதைத்து வைக்கும் செல்வம், அறிவில்லாத அச் செல்வனைக் குடிகெடுத்துச் செல்லும். |
|
புல்லர்-அறிவில்லாதவர். | | 5 |
| செல்வச் சுமையினர் இரங்கார் சிறிதும் |
280 | வேம்புதே னீயுமோ வெயில்தண் ணாகுமோ பாம்பமு தளிக்குமோ பரிவில் பூரியர் தாம்பொதி யாளெனத் தாங்கும் பொன்னினைத் தேம்புமா துலர்க்குளஞ் சிரந்த ளிப்பரோ. |
|
| வேம்பு தேனையும், வெயில் குளிரையும், பாம்பு சாவா மருந்தினையும் தாராமைபோலக், கீழோர் பொன்னைச் சுமக்கும் பொதியாளர் ஆவதல்லாமல் வாடி வருந்தும் ஏழைகட்கு மனமகிழ்ந்து ஏதுங் கொடார். |
| தண்-குளிர்ச்சி. அமுது-சாவாமருந்து. பூரியர்-கீழோர். தேம்பும்-வாடும். ஆதுலர்-ஏழைகள். |
| 6 |
| ஈயாச் செல்வன் சாவையே எவரும் விரும்புவர் |
281 | ஈகையில் லாதுபொன் ஈட்டு வோன்கொண்ட தோகையு மைந்தருந் தொலைகி லானென ஓகையா யருவிட முணவி லிட்டவன் சாகையே கருதிமா தவஞ்செய் வார்களே |
|
| ஈயாது பொன்னைமட்டும் தேடுவோனின் மனைவியும் மக்களும் அவன் சாவையே விரும்புவர். அதன்பொருட்டுச் சோற்றினில் நஞ்சு கலந்து கொடுக்கத் தவமும் செய்வர். |
| தோகை-மயில் போன்ற மனைவி. மைந்தர்-மக்கள் தொலைவு-சாவு. சாகை-சாதல். |
| 7 |