| நீதிநூல் |
| வேறு |
| நன்றியில் செல்வக்காப்பு நச்சுமரக் காப்பாம் |
282 | அனுபவ மொன்றே பொன்னால் ஆயநற் பயனஃ தின்றேற் புனலிலாத் தடத்தைப் பெய்யாப் புயலினைப் பொருவு மப்பொன் தினமுமே நுகர்த லின்றித் தீனர்க்கும் வழங்க லின்றித் தனமதைக் காத்தல் நச்சுத் தருவினைக் காத்தல் போலாம். |
|
| செல்வத்தின் பயன் ஈதலும் பகுத்துண்டலும் ஆகிய நுகர்வாம். இவ்வுண்மை யறியார் பணத்தைத் தேடிக் காப்பர். இவர்கள் பணம் புனலிலாக் குளத்தையும் பெய்யா மழையையும் போலும். இப் பணமுள்ளவர் தாம் நுகர்தலும் ஈதலும் செய்யாது பொருளைக் காத்திருப்பது நச்சுமரத்தைக் காப்பது போலாம். |
|
அனுபவம்-நுகர்வு; அழுந்தியறிதல். | | 8 |
| எல்லாரும் தமதென்பர் இவறியான் பொருளை |
283 | தமதென உலோபர் ஈட்டுந் தனத்தினைக் கொடுங்கோன் மன்னர் எமதென இருப்பர் கள்வர் எமதென்பர் கிளைஞ ரெல்லாம் உமதெம தெனவா திப்பர் உலகென தென்னும் யாமும் நமதென்போம் பாரம் தாங்கி நலிவதென் பிசின ரம்மா. |
|
| ஈட்டும் பணம் முழுவதும் தமக்கே என்று இறுமாப்புக் கொண்டிருக்கும் இவறன்மையுடையார் அப்பணத்தைச் சுமக்கும் சுமை தாங்கியாவர். அப் பணத்தைக் கொடுங்கோலர் தமதென்பர். கள்வர்கள் எமதென்பர். உறவினர்கள் ஒருவரோடொருவர் உமது எமதென்றுரைத்து வழக்காடுவர். உலகு தன் |