பக்கம் எண் :

133

z
 கடும்பற்று
 
 னுடையது என்று சொல்லும். நாமும் நம்முடையது என்போம். அவன் இவற்றை மறுக்க முடியாது.
 வாதிப்பர்-வழக்காடுவர். பாரம்-சுமை.
 9
 
வேறு
 ஏழைக்கு இடாமல் செல்வர்க்கு வழங்குதல் இழிவு
284மெலியு மேழைக் கிடாமல் விளைபொன்னை
மலியுஞ் செல்வர்க்கு வாரி வழங்குதல்
நலியி லார்க்கருள் நன்மருந் தும்பெருகு
ஒலிக டற்பெய் யுறையையும் ஒக்குமே.
 ஊணின்றி மெலியும் ஏழைகளுக்கு உண்ண ஏதும் கொடாமல் நலம் தரும் பொருளை பெருஞ் செல்வர்க்கு வாரி வழங்குதல், நோயிலார்க்கு நல்ல மருந்து கொடுத்தலையும் கடலகத்து மழை பொழிதலையும் ஒக்கும்.
 விளை-(நலம்) தரும். மலியும்-பெருகும். நலி-துன்பம்; நோய். உறை-மழை
 10
 ஈயாக் கயமை இனம்விழை விலங்கினும் இழிவு.
285வனவி லங்கும்விண் வாழ்பக்கி யுந்தந்தம்
இனமோ டன்றியெ டாவிரை யேழைகட்கு
அனமி டாதுதம் ஆகம தொன்றையே
மனமு வந்து வளர்ப்பர் கயவரே.
 காட்டில்வாழ் விலங்கும் வானத்துப் பறக்கும் பறவையும் தங்கள் தங்கள் இனங்களோடு கூடியல்லாது இரை எடாது. கீழோர்மட்டும் மக்களினமாகிய உயிர்கட்குச் சோறிடாது தம் உடம்பு ஒன்றையே மனமகிழ்ந்து வளர்ப்பர்.
 வனம்-காடு. பக்கி-பறவை. அனம்-சோறு ஆகம்-உடம்பு.
 11
 வேறு
 பழம் உதிரா மரம்போல் பறிபடுவர் கயவர்
286 தானற்கனி சிந்தாதுயர் தருவைச்சிலை கழியால்
ஊனப்பட மோதிப்பழம் உதிர்ப்பாரென வுலகில்
தீனர்க்குவ ழங்காதுறை தீயன்பசி யுளரால்
மானத்தையி ழந்தேபொருள் வவ்வப்படு வானே.