பக்கம் எண் :

136

 நீதிநூல்
 
 வேறு
 வறுமை, பாவம், துன்பம் சோம்பலால் வரும்
291
மடிசேரு மவர்க்கொரு நாளுமறல்
விடியாதவர் நெஞ்சிடை வெந்துயரே
குடியாகு மறந்தொடர் குற்றமெலா
நெடிதாக வளர்ந்திடு நிச்சயமே.
 
ஒன்னார்க்கு அடிமைப்படுத்தும் வன்மைவாய்ந்த மடியை மேற்கொள்வார். எப்பொழுதும் வறுமைப்பிணி நீங்கார்; மனத்திடத்துக் கடுந்துன்பம் குடிகொள்ளும். பாவம் சேரும் தீமைகளெல்லாம் வளரும்; இவை உறுதியேயாம்.
  மடி-சோம்பல். மறல்-வறுமை. மறம்-பாவம். நிச்சயம்-உறுதி.

4

  வேறு
  கொடுமையும் களவும் கொள்வர் சோம்பரே
292
பாரெல் லாமாள் வேந்தரு நூல்தேர் பண்போருஞ்
சீரெல் லாஞ்சூழ் செல்வரு மந்தஞ் சேராரே
நேரில் லாமா பாதகர் தீனர் நெடுஞ்சோரம்
ஊரெல் லாஞ்செய் துய்பவர் மாசோம் புடையாரால்.
  உலகையாள் வேந்தரும் கற்றுவல்லபுலவரும் சிறப்பெய்தும் செல்வரும் சோம்பலுடையவராயிரார். பெரும் பாதகரும் கொடியவரும் ஊரெல்லாம் களவு செய்யும் பெருங் கள்ளரும் மிக்க சோம்புதல் உடையவராவர்.
  பார்-உலகம். மந்தம்-சோம்பல். தீனர்-கொடியவர். சோரம்-களவு.
  5
  உழையாச் சோம்பர் பெருவசை உறுவர்
293
எய்யா வம்பே வல்லிசை மாறி யிருமென்று
மெய்யா விரத மாழி யொடுங்கெட் டொழியுந்தம்
மெய்யா னதுவே வியர்வை யுறப்பல் வினைகையாற்
செய்யா தவரே நோய்பல வுற்றுத் தேய்வாரே.