| நீதிநூல் |
| சினமுளார் நச்சுயிர்சேர் துன்புறுவர் |
300 | நாளு நாங்கொளுந் துயர்க்கெலாங் காரண நாடின் மூளுஞ் சீற்றத்தின் விளைவதா முனிவக முடையோர் தேளும் பாம்பும்வெஞ் சினவிலங் கினங்களு நனிவாழ்ந்து ஆளுங் கானில்வாழ் பவரெனத் தினமஞ ரடைவார். என்றும் நாம் அடையும் துன்பத்திற்குக் காரணம் சினமேயாம். |
|
| உள்ளத்தில் சினமுடையோர் தேள் பாம்பு கொடிய விலங்குகள் முதலியன மிகுதியாக வாழ்ந்து ஆட்சிசெய்யும் கொடுங்காட்டில் வாழ்பவர் போன்று நாள்தோறும் நீங்காத் துன்பம் அடைவார். |
|
நாளும்-என்றும். முனிவு-சினம். அகம்-உள்ளம். தினம்-நாள்தோறும். அஞர்-துன்பம். | | 6 |
| அறிவிலா வேலையாளைச் சினப்பது அறமன்று |
301 | தழையுஞ் செல்வத்துட் பிறந்துநல் லோரவை சார்ந்து பிழையில் நூலெலா முணர்ந்துநீ வைகலும் பிழைத்தாய் இழையுந் தீனராய்ப் பிறந்துகற் றிடவகை யில்லா உழையர் செய்பிழைக் காமுனிந் தனையிதென் னுளமே. |
|
| உள்ளமே! வளரும் செல்வத்துட் பிறந்து நல்லோர் கழகம் சேர்ந்து குற்றமற்ற நூல்களையெல்லாம் உணர்ந்து நாடோறும் நீ வாழ்கின்றாய். மூச்சுவிடவும் வலியில்லாத வறியராய்ப் பிறந்து கற்க வகையில்லாமல் உன்னையன்றிப் புகலிடமில்லாமல் வேலை செய்யும் உன் வேலையாளைச் சினப்பது தகுதியா? |
| தழைதல்-வளர்தல். அவை-கழகம். வைகலும்-நாள்தோறும். உழையர்-வேலையாள். |
| 7 |
| வேறு |
| கடுஞ்சினம் கோடல் கல்அம்பைக் கடிதலாம் |
302 | பைதலே யெய்த லாதிப் பரன்செய லாமப் பைதல் செய்தவர் தமைச்சி னத்தல் சினவரா தன்மேற் கல்லைப் பெய்தவன் தனைவிட்டக்கல் பிளந்திடப் பொரலுங் கையால் எய்தவன் தனைவிட் டம்பை முனிதலு மேய்க்கு மாலோ. |
|
| துன்பம் வருதல் நம் செய்வினைக்கீடாக முழுமுதற் கடவுள் ஆணையாம். அத்துன்பத்தை நேர்நின்று செய்தவரிடம் சினம் |