| சினம் |
| கொள்ளல் சினங் கொள்ளப்போதல் தம்மேற் கல் எறிந்தவனை விட்டு விட்டு அக்கல்லைப் பிளக்கச் சண்டை செய்வதையும் அம்பெய்தவனை விட்டு விட்டு அம்பை முனிவதையும் ஒக்கும். |
| பைதல்-துன்பம். |
| 8 |
|
விலங்கோ டறிவில் சிறார்பித்தர் கிழவர் வெகுள்வர் | 303 | தெருளுறு விலங்கி னுக்கும் தெளிவறி யாச்சி றார்க்கும் மருளுறு பித்த ருக்கும் மடவிருத் தருக்கும் கோபம் பொருளலால் அயலோர்க் கில்லை புகன்றவிந் நால்வ ரேயோ அருளுறு சினமீக் கொள்வார் அனையருள் ஒருவ ரேயோ. |
|
| தெளிவில்லாத காட்டுக் கொடிய விலங்குகளும் நல்லறிவு வாயாத சிறுபிள்ளைகளும், மயக்கமுடைய பித்தரும், அறிவில்லாத முதியோரும் சினங்கொள்வதல்லால், மற்றையோர் சினம் கொள்ளார். சினம் கொண்டால், சினம் கொண்டவர் இந்நால்வரோ அல்லது அவருள் ஒருவரோ? |
| தெருள்-தெளிவு. மருள்-மயக்கம். மடம்-அறியாமை. விருத்தர்-முதியோர். |
| 9 |
| சினத்தால் வெற்றி பகைக்கே சேரும் |
304 | பெற்றதன் நாட்டை யாளான் பிறர்நாட்டை யாள்வான் கொல்லோ உற்றதன் சீற்ற மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்லக் கற்றறி யானொன் னாராங் கனலிக்கோர் வையே யாவன் கொற்றமவ் வொல்லார் கொள்வார் கோபம்போல் தாப* முண்டோ. |
|
| தன் நாட்டை ஆளத்தெரியாதவன் பிறர் நாட்டை எப்படி ஆளுவான்? தன் சினத்தை அடக்கித் தன்னையே வெல்லத் தெரியாதவன் பகைவனை எப்படி வெல்லுவன்? சினமுள்ளவன் பகைவனுக்குத் தீ முன்பட்ட வைக்கோலாவன். அதனால் பகைவனே வெல்லுவான். கோபம்போல் பெருந்தீ வேறொன்றில்லை. |
| *சினமென்னும். திருக்குறள், 306 |