பக்கம் எண் :

143

 

அதி. 26-பொறாமை

 

பேராசை யுள்ளோர் பெருங்கே டெய்துவர்

306
மாங்கனி வாயிற் கவ்வி
    மரத்திடை யிருக்கு மந்தி
பாங்கர்நீர் நிழலை வேறோர்
    பழமுணுங் குரங்கென் றெண்ணித்
தாங்கரு மவாவிற் றாவிச்
    சலத்திடை யிறந்த தொப்ப
நீங்கரும் பொறாமை யுள்ளோர்
    நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே.
 

குரங்கு மாம்பழத்தை வாயில் பற்றிக்கொண்டு மரத்திடை யிருந்தது. பக்கத்து நீரில் தன் நிழல் தோன்றிற்று. அதை வேறொரு குரங்கு பழம் வாயில் வைத்திருப்பதாக நினைத்தது. அதைப் பிடுங்க ஆசைகொண்டது. நீரில் பாய்ந்து இறந்தது. இதைப்போன்று பொறாமைப் படுகிறவர்கள் உலகத்தில் கேடடைவார்கள்.

  கனி-பழம். கவ்வி-பற்றி. மந்தி-குரங்கு. பொறாமை-பேராசை.
 

1

 

வேறு

 

பொய்இன்ப துன்பைப் பொறாமையான் கொள்வன்

307
தாரணியி லெவரேனுந் துயருறிற்றன்
    தலையின்முடி தரித்த தொப்பாஞ்
சீரணியுஞ் செல்வமவர் படைத்திடிற்றன்
    தாய்மனைசேய் செத்த தொப்பாங்
காரணமே யொன்றுமின்றிச் சுகதுக்கந்
    தன்வலியாற் கணத்துக் குள்ளே
பூரணமா வாக்கிடுவோன் பொறாமையுளோன்
    அன்றியெவர் புவியின் கண்ணே.
 

பிறர்வாழ மனம் பொறுக்காத் தீயோருக்கு உலகில் யார் துன்புறினும் தந்தலையில் முடி சூடியது ஒப்பாம். பிறர் செல்வம்