| | பொறாமை |
| | பொறாமைத் துன்பம் போகா தொருநாளும் |
| 310 | மக்கள் பலருளார் மகிவி சாலமாம் பக்க மவர்தினம் படைப்ப ரோர்நலம் ஒக்க அதுபொறா துள்ள நைந்திடில் துக்க மோயுமோ சொல்லென் நெஞ்சமே. |
|
| | உலகம் பெரும் பரப்பினை உடையது. அப்பரப்புக்கு ஏற்றவாறு மக்களும் பலர் வாழ்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நலம் பெறுவர். அவற்றையெலாம் கண்டு மனம் பொறாது உள்ளம் இடிந்தால் அத்துன்பம் என்று முடியும்? நெஞ்சமே நீ சொல். |
| | மகி-உலகம். விசாலம்-பரப்பு. நைந்திடில்-இடிந்தால் ஓயும்-என்று முடியும்? |
| | 5 |
| | அவ்வியம் கொள்ளார் அறிவு மாண்புடையார் |
|
| 311 | நிறையு நீர்க்கசை வில்லை நீணிலத்து அரையுங் கல்வியில் அறிவின் மேன்மையில் குறையு ளார்க்கலாற் கோதின் மண்பினார்க்கு இறையும் அவ்வியம் இல்லை யில்லையே. |
|
| | கலம் நிறைய நீர் இருப்பின் அந்நீர் அசைந்து ஓசையிடாது. உலகத்துக் கல்வி யறிவினால் மேன்மையுற்றோர் பொறாமை கொள்ளார். அவற்றால் குறையுடையவரே பொறாமை கொள்வர். |
| | அவ்வியம்-பொறாமை. |
| | 6 |
| | தீமைக்கு வருந்துவோர்ச் சேரும் பெருந்துன்பம் |
| 312 | அறமு ளார்கள்போல் அறிஞர் போல்புகழ் பெறவ ருந்துதல் பெருமை யாயினும் புறமு ளார்கள்போல் பொருளி லேமென உறுமவ் வுறுகணே உறுக ணீயுமே. |
|
| | நன்மையுள்ளவர்களையும் அறிவுள்ளவர்களையும் போல் இசையுண்டாகப் பாடுபடுதல் மேன்மை. ஆனால் பிறரைப்போலப் பொருளில்லையே என்று பொறாமைகொண்டு வருந்தும் வருத்தம் பெருந் துன்பம் தரும். |
| | புகழ்-இசை. புறமுளார்-பிறர். பொருள்-பணம். உறுகண்-வருத்தம். உறுகண்-பெருந்துன்பம். |
| | 7 |
| | நீ.-10 |