| நீதிநூல் |
| வேறு |
| கொள்ளும் பொறாமையால் கூடும் புதுத்துன்பம் |
313 | பூட்டுமரி கண்டம் புனைந்தழுங்கு வார்போலுந் தோட்டியினைத் தானே சுமந்துகொடுங் கயம்போலும் வாட்டுந் துயர்கள்பல வைய மிசையிருக்கக் கோட்டமுளோர் வேறா குலந்தமக்குண் டாக்குவரே.. |
|
| கழுத்தில் இருப்பு வளையம் மாட்டித் துன்புறுத்துவாரைப் போலவும், தோட்டியைச் சுமந்து துன்புற்றழியும் யானை போலவும், உலகில் முன்வினைக்கீடாகப் பல வருத்தப்படும் மக்கள் பொறாமைத் துன்பத்தை வேறாகக்கொண்டும் வருந்துவர். |
| அரிகண்டம்-கழுத்தில் மாட்டும் இருப்பு வளையம். கோட்டம்-வளைவு; பொறாமை. ஆகுலம்-துன்பம். |
| 8 |
| |
314 | என்ன நீவருந் திக்கவி பாடினும் எடுத்தகற் பனைமுன்னோர் சொன்ன தேயலால் நூதன மொன்றிலைத் தொன்மைநூல் பலவாகும் முன்னந் நூலெலாந் தந்தவ னீயிலை முற்றுணர்ந் தனையல்லை உன்னின் மிக்கவர் பலருளார் கல்வியால் உள்ளமே செருக்கென்னே. |
|
| நெஞ்சமே! நீ வருந்திக் கவி பாடினும் அக்கவியின்கண் காணப்படும் கற்பனை நயங்களெல்லாம் முன்னோர் பாடியனவே அன்றிப் புதிது ஒன்றுமின்று. முன்னுள்ள நூலும் பலவாகும். அவை எல்லாந் தந்ததும் நீயன்று. எல்லாங் கற்று முணர்ந்ததுமில்லை. உன்னைவிடக் கூடக் கற்றவரும் பலருளர். அதனால் கல்வியால் செருக்குதல் தக்கதன்று. |
| நூதனம்-புதிது. தொன்மை-பழைமை. செருக்கு-இறுமாப்பு; தற்பெருமை. |
| 1 |