| அழகாற் செருக்கல் |
| கெண்டைமீனை யொத்த கண்களும், தீம்பாலையொத்த மொழியும் காணப்பெறாமையால் மயங்கினோம். |
| தோல்-அழகு. சுடலை-சுடுகாடு. திகைப்பு-மயக்கம். |
| 2 |
| நாறுட லழகால் செருக்குறார் நல்லோர் |
322 | நோக்கதனிற் பீளையிரு செவிகளிலுங் குறும்பியன நுகர்வா யெச்சில் மூக்கதனிற் சளிதலையிற் பேன்வெயர்வை மலசலங்கள் மூளு நாற்றம் போக்கவொரு நாட்கழுவா விடிலழுக்கு மிகத்திரண்டு புழுத்து நாறும் ஆக்கமிலாத் தேகமிதை யழகென்னச் செருக்கலறி யாமை யாமே. |
|
| கண்ணில் பீளை வடிதலும், காதில் குறும்பி சேர்தலும், வாயில் எச்சில் ஊறலும், மூக்கில் சளியுண்டாதலும், தலையின்கண் பேனும், உடம்பில் வெயர்வையும், ஒன்றுக்கிரண்டுக்குச் செல்லலும் அதனால் வரும் தீயநாற்றமும் ஆகிய இவற்றைப் போக்க ஒவ்வொரு நாளும் முழுகவேண்டும்; முழுகாவிட்டால் புழுத்து நாறும். இத்தகைய உடம்பில் காணும் அழகினுக்குச் செருக்குக்கொள்வது அறிவின்மையேயாகும். |
| நோக்கு-கண். செருக்கு-தற்பெருமை. |
| 3 |
| வேறு | உடலுள் அழுக்கை உன்னில் செருக்குறார் |
|
323 | கட்புலன்றனை யேகவர்ந்திடு கவினுளேமென வனுதினம் பெட்புறப்புவி யிற்செருக்குதல் பெருமையன் றொளிர்பேருடல் உட்புறத்தி னையேதிருப்பிடி லோங்கலாமலக் காடுசூழ் மட்புறச்சுவர் தீட்டுசித்திர மானுநம்மெழில் நெஞ்சமே. |
|
| நெஞ்சே! கண்ணைக் கவரும் அழகுடையேம் என்று நாளும் உலகில் விருப்புடன் தற்பெருமை கொள்ளுதல் மாண்பாகாது. விளங்குகின்ற பெரிய உடம்பின் உட்பக்கத்தைத் திருப்பினால் மலைபோன்ற அழுக்குப் பெருக்கத்தைக் காணலாம். மண்சுவர் மேல் எழுதிய சித்திர அழகையொக்கும் நம் உடல் அழகு. |