| நீதிநூல் |
| கவரும்-இழுக்கும். கவின்-அழகு. அனுதினம்-நாளும். பெட்புற-விரும்ப. ஒளிர்-விளக்கம். ஓங்கல்-மலை. மானும்-ஒக்கும். எழில்-ஓங்குமழகு. |
| 4 |
| வேறு |
| நயனிலான் உடலழகை நல்லோர் நயவார் |
324 | மண்ணிற்செய் பாவைமீது வயங்குபொற் பூச்சோ தண்பூங் கண்ணியை மாற்றிச் சூடுங் காட்சியோ பழம்பாண் டத்திற் பண்ணிய கோல மோநற் பண்பொடு ஞானங் கல்வி புண்ணிய மேது மில்லான் பூண்டபே ரெழிலு டம்பே. |
|
| குணம் மெய்யுணர்வு படிப்பு நலத்தொண்டு முதலிய ஒன்றுமில்லாதவன் கொண்டுள்ள உடலழகு, மண்பாவைமீது பூசும் பூச்சோ? அழகிய பூமாலையைத் துடைப்பத்தில் கட்டிக் காணும் காட்சியோ? பழைய ஏனத்தில் செய்த அழகோ? |
| வயங்கு-விளங்கு. மாறு-விளக்குமாறு; துடைப்பம். புண்ணியம்-நலத்தொண்டு. |
| 5 |
| |
325 | மணிகள்பல வகைக்கல்லாம் பொன்முதலு லோகமின்னு மண்ணாங் கட்டி துணிபட்டா டைகள்பருத்தி நூல்பூச்சிக் குடர்நாயின் தோலு ரோமம் அணிபுழுகு கத்தூரி முதலியபூ னையின்மலம்பா லாவி ரத்தந் தணிவில்தேன் வண்டெச்சில் இவைசெல்வ மெனச்செருக்கல் தகுமோ நெஞ்சே. |
|
| நெஞ்சே! ஒன்பது வகையாக வழங்கும் மணிகள் கற்களாம். பொன் முதலியன மின்னுகின்ற மண்ணாங்கட்டிகள். துணி பட்டு முதலியன பருத்திநூல் பூச்சிக்குடர் நாயின்தோல் விலங்கு முதலியவற்றின் மயிர்கள். அணியப்படும் புனுகு கத்தூரி |