பக்கம் எண் :

154

 நீதிநூல்
 
 

நாம் இடுப்பில் கோவணமுமில்லாமல் பிறந்தோம். இறக்கும்காலத்தும் அவ்வாறே இறப்போம். நடுவில் சேரும் செல்வத்தால் நெஞ்சமே தற்பெருமை கொள்ளுவது எதற்காக? இப்பெருமை ஊரவர்களுக்கெல்லாம் சுமை சுமக்கும் எருது செருக்குறுதலை யொக்கும்.

 

இடை-இடுப்பு. உதித்தல்-பிறத்தல். கடை-இறப்பு. உடைமை-செல்வம். பொதி-சுமை. விடை-எருது; காளை. வீண்செருக்கு-தற்பெருமை.

 

3

 

மாறிவரும் செல்வத்தால் செருக்குறல் வசையே

328
சுழல்சக டக்கால்போலுந் தோன்றியே யழிமின்போலும்
அழன்மன வேசைபோலு மருநிதி மேவிநீங்கும்
பழமைபோ லதனைநம்பிப் பழியுறச் செருக்கல்மேக
நிழலினை நம்பிக்கைக்கொள் நெடுங்குடை நீத்தலொப்பே.
 

உருளும் வண்டியுருளையின் கால்போலவும், தோன்றி மறையும் மின்னைப்போலவும், நச்சுள்ளமுடைய பொதுமகள் போலவும் செல்வம் பொருந்தி நீங்கும் அச் செல்வத்தை அழியாதிருக்குன்மென்று நம்பி வசை பெருகும்படி தற்பெருமை கொள்ளுதல், மேகத்தின் நிழலை நம்பிக் கையிலுள்ள பெரிய குடையை நீக்கிவிடுவதை யொக்கும்.

 சகடம்-வண்டியுருளை. அழியும்-மறையும். அழல்-நஞ்சு. வேசை-பொதுமகள். பழைமை-தொன்மை; அறிவின்மை. பழி-வசை. ப்னீத்தல்-நீக்கல்.
 

4

 

வேறு

செல்லும்பேர்ச் செல்வத்தால் செருக்குறல் நெறியன்று

329
தரித்திரந் தரித்திர மென்னுந் தாரணி
சிரித்திடச் செல்வமே செல்வ மென்னுமிச்
சரித்திர முணர்ந்துமே தரையிற் பொன்னெமக்
குரித்தெனச் செருக்குத லுரனன் றுள்ளமே.
 

நெஞ்சமே! உலகம் நகை செய்ய வறுமையாகிய தரித்திரம் நிலைப்பின்மையாகிய தரித்திரமென்று சொல்லும். பொருளாகிய செல்வமும் நீங்குதலாகிய செல்வம் என்று சொல்லும். இவ்வுண்மை உணர்ந்தும் `உலகில் செல்வம் நமக்குரியதுழு என்று தற்பெருமை கொள்ளுதல் அறிவுடைமை ஆகாது.