| செல்வச் செருக்கு |
| தரித்திரம்-வறுமை. தரித்திரம்-சென்று விடுவோம். செல்வம்-பணம்; பொருள். செல்வம்-நீங்குவம். உரன்-உடைமை. |
| 5 |
| செருக்குவருங்கால் செல்வம் அழியும் |
330 | நாசமாங் காலமே நண்ணு முன்னிறகு ஈசலுக் கெய்தலும் இரியு முன்னமே தேசது மிகுத்தொளிர் தீபம் போலவும் நீசர்தஞ் செருக்கினா னிதியி ழப்பரே.. |
|
| ஈயலுக்கு அழிவுகாலம் வரும்பொழுது முன் இறகு முளைக்கும். விளக்கு அணையப்போகும் பொழுது கொழுந்துவிட்டு எரியும். இவைபோல தீச்செயல் புரியும் கீழோர் செல்வம் அழிவெய்தும்பொழுது அவர்களுக்குச் செருக்கு உண்டாகும். |
| நாசம்-அழிவு. இரியும்-கெடும். தீபம்-விளக்கு. நீசர்-கீழோர். |
| 6 |
| வேறு | செல்வம் அகன்றபின் செருக்கினர் நிலையென்? |
|
331 | செழித்திடுநாளினிற் செருக்குற்றாய் கழித்துணைமா நிதிகைநீங்கிற் பழித்திடுமுலகின் முன்பரிவின்றி விழித்திடலெப்படி வினைநெஞ்சே. |
|
| தீவினை நெஞ்சே! பெரும்பொருள் வளமாக இருக்குங்காலத்து (நல்லது செய்யாது) தற்பெருமை கொண்டாய். அதனால் அப்பொருள் உன்னைவிட்டு நீங்கும். நீங்கியகாலத்துப் பழித்துக் கொண்டிருக்கும் உலகவர்முன் வருத்தமின்றித் தோன்றுவது எவ்வண்ணம்? |
| மாநிதி-பெரும்பொருள். செழிப்பு-வளம். பரிவு-வருத்தம். எப்படி-எவ்வண்ணம். வினை-தீவினை. |
| 7 |
| ------ |