பக்கம் எண் :

156

  
 

அதி. 30- தீயரைச் சேராமை

 

தீயவர் பலரும் தீயரைச் சேர்வர்

332
செழுமல ரிடைமது சிறையளி நுகரும்
முழுவிட மதுபெறு முனிவுடை யரவம்
பழுதறு மறநிலை பயிலுவர் சிலரே
வழுவய லவரிட மருவுவர் பலரே.
 

சிறந்த பூக்களிலுள்ள தேனை வண்டுகள் உண்ணும். சீறும் அரவமும் முழு நஞ்சினையே பெறும். குற்றமற்ற நன்னெறி நிற்பாருடன் சிலரே பழகுவர். குற்றமுடைய தீநெறி யொழுகுவோரிடம் பலர் கூடுவர்.

 அளி-வண்டு. முனிவு-சீற்றம். வழு-குற்றம். மருவுவர்-கூடுவர்.
 

1

 

சாரினும் கீழ்கள் தம்நிலை மாறா

333
கரிநிற முறம்வெளி றுடைகரி யணுகின்
சொரிகரி கலையுறு சுசியினை யுறுமோ
பெரியவர் குணநிலை பெறலரி தறமே
யிரிகல ரொடுகல வறவுறும் இழிபே.
 

வெண்மையான ஆடை கரியைச் சார்ந்தால் தன்னிறம் மாறிக் கருமையாகிவிடும். ஆனால் கரி அவ் வாடையைச் சார்ந்ததனால் தன் கருமை மாறி வெண்மையாவது இல்லை. அதுபோல், கீழ்மக்கள் மேலோரைச் சேர்ந்தாலும் மேன்மை யடைவது இல்லை. ஆனால் மேலோர் கீழோரைச் சேரின் இழிபினை எய்துவர்.

 சுசி-வெள்ளை. இரி-கெடு. கலர்-கீழோர்.
 

2

 

சேரிடத்தால் சிறப்பிழியு யாரையும் சேரும்

334
மனிதர்கோள் மருவுநர் தமைக்கொண் டொதுவர்
புனிதமில் இடையின்கீழ் பொருவில் வாசத்தீங்
கனியையுந் தள்ளுவர் கயவர் தம்மைச்சேர்
இனியநற் குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே.
 

மக்கள் யாருடன் கூடுகின்றார்களோ அவர்கள் பெறும் மதிப்பையே பெறுவர். மணமுள்ள இனிய கனியும் தூய்மையில்லாத