| தீயரைச் சேராமை |
| இடத்தில் வீழ்ந்துவிட்டால் அதனை யாரும் கொள்ளாது தள்ளுவர். இவைபோல் கீழோரைச் சேர்ந்த நல்ல குணமுடையோரும் இழிவு பெறுவர். |
| கோள்-மதிப்பு. மருவுநர்-கூடுவோர். இகழ்ச்சி-இழிவு. |
| 3 |
| வேறு |
| இழிந்தாரைச் சேரின் இழிவென்றும் நீங்கா |
335 | மணமனை சேர்மண மாலை மாண்புறும் பிணவனத் தாரிழி வெய்தும் பெற்றியார் கணமதிற் சேர்ந்தவர் கனங்கொண் டோங்குவர் குணமிலா ரினமுறல் குறையுண் டாக்குமே. |
|
| கலியாண வீட்டைச் சேர்ந்த மணமுள்ள பூமாலை சிறப்படையும். அம்மாலை சுடுகாட்டைச் சேர்ந்தால் மிக்க இழிவடையும். நல்ல தன்மையையுடைய பெரியவர் கூட்டத்தில் சேர்ந்தவர் பெருமைபெற்று உயர்வர். நல்ல பண்பில்லாதவர் கூட்டத்தைச் சேர்ந்தால், இழிவையுண்டாக்கும். |
| பிணவனம்-சுடுகாடு. பெற்றியார்-பெரியவர். கணம்-கூட்டம். கனம்-பெருமை. குணமிலார்-இழிந்தவர். இனம்-கூட்டம். குறை-இழிவு. |
| 4 |
| தாழ்ந்தோர் உயர்ந்தோர் எனும்பேர் சார்பாலுண்டாம் |
|
336 | மண்ணியல் பாற்குண மாறுந் தண்புனல் கண்ணிய பொருள்மணங் கலந்து வீசுங்கால் புண்ணிய ராதலும் புல்ல ராதலும் நண்ணினத் தியல்பென நவில லுண்மையே. |
|
| குளிர்ச்சி பொருந்திய தண்ணீர் தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினால் தன்மையில் மாறுதல் அடையும். காற்று தான் பொருந்திய பொருளின் மணத்தைக் கலந்து வீசும். அவைபோல் மக்கள் உயர்ந்தோர் ஆதலும் தாழ்ந்தோர் ஆதலும் அவரவர் சார்ந்த கூட்டத்தின் தன்மையெனக் கூறுவது உண்மையாகும். |
| கண்ணிய-பொருந்திய. கால்-காற்று. புண்ணியர்-உயர்ந்தோர். புல்லர்-தாழ்ந்தோர். நண்ணல்-சார்தல். நவிலல்-கூறுதல். |
| 5 |