| நீதிநூல் |
| நல்லார் பொல்லார் எனும்பேர் சார்பால் நண்ணும் |
337 | பாரினிற் பிறந்தபோ தெவரும் பண்பினார் பூரிய ரெனப்பெயர் பூண்ட தில்லையால் சீரிய ரென்னலுந் தீய ரென்னலுஞ் சேரினத் தியல்பினாற் சேர்ந்த நாமமே. |
|
| உலகில் பிறந்த யார்க்கும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பெயர் ஏற்பட்டதில்லை. நல்லவர் தீயவர் என்னும் பெயர் அவரவர் சேர்ந்த இனத்தினால் உண்டாயது. |
| பண்பினார்-உயர்ந்தோர். பூரியர்-தாழ்ந்தோர். சீரியர்-நல்லவர். நாமம்-பெயர். |
| 6 |
| கயவரைச் சார்வதால் கணக்கிலாத் தீமையாம் |
|
338 | கயவரைச் சேர்ந்தவன் கலந்த போதவர் செயலினை யெண்ணுவன் தினஞ்செ லச்செல மயன்மிகுந் தவர்செயன் மகிழ்ந்த னுட்டிப்பன் இயவரைச் சேர்தல்போல் இல்லைத் தீமையே. |
|
| கீழ்மக்களைச் சேர்ந்தவன் சேர்ந்தபொழுது அவர் செயலை யிழிபாக நினைப்பான். நாளேற நாளேற மயங்கி அவர் செயலை மகிழ்ந்து கைக்கொள்வன். ஆதலால், கீழ்மக்களைச் சேர்தல்போல் பெருந்தீமை வேறொன்றும் இல்லை. |
| கயவர்-கீழ்மக்கள். தினம்-நாள். இயவர்-கீழோர். |
| 7 |
| ------ |